இறந்து விட்ட அக்காவால்
இனி எழுந்து வரத்தான் முடியாது
எழுத முடியாமல் எல்லாம் இல்லை
காற்றில் அசையும்
இலைகளெல்லாம் என்னவாம்
இலையில் சுருளும்
வெளியெல்லாம் எதுவாம்
இன்னும் உற்று நோக்க
அக்காவின் அச்சு அசல் தான்
அந்தி மாலை வெளிச்சம்
இறந்து விடல்
ஒரு சம்பராதயம் தான்
கேட் சாத்தி விட்டால்
ஆலயத்தில் ஜீஸஸ்
இல்லையென்றா அர்த்தம்....!

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.