சுடும் வெப்பம் கடுங்குளிர்
தாங்கிப் பழகியபின்
பெரும்பாறையானேன்
பெயர்த்தெடுக்க முடியாத
கொடு நகரில்.
என்னை நீராட்டும்
நிலவொளிக்குத் தெரியும்
எனக்குள் படிந்திருக்கும்
நீரோடையின் தடங்கள்.

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.