புறநகரின் முடிவில்
வண்ணமிழந்து இடிந்து
கம்பி துருப்பிடித்து
இத்துப்போய்
எழுந்து நிற்குமிந்த
ஏரி காத்த அய்யனார் சிலையில்
வெவ்வேறு வீதியின்
இருவேறு பறவைகள் முத்தமிடுகின்றன.
ஊர் வெயிலை இழுத்துப் போர்த்தி நகர்கின்றன
கார்கால மேகங்கள்.
- சதீஷ் குமரன்
புறநகரின் முடிவில்
வண்ணமிழந்து இடிந்து
கம்பி துருப்பிடித்து
இத்துப்போய்
எழுந்து நிற்குமிந்த
ஏரி காத்த அய்யனார் சிலையில்
வெவ்வேறு வீதியின்
இருவேறு பறவைகள் முத்தமிடுகின்றன.
ஊர் வெயிலை இழுத்துப் போர்த்தி நகர்கின்றன
கார்கால மேகங்கள்.
- சதீஷ் குமரன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.