அப்படியொன்றும் சொல்லும்படியான
வாதங்களை முன் வைத்துவிடவில்லை
அவனின் மௌனம்
நினைத்துப் பார்ப்பதற்கு
ஏற்றதாய் அமையவில்லை பொழுதுகள்
நங்கூரத்தின் கெட்டித்த முனை
மனதின் ஆழம் வரை நீண்டதேயொழிய
தொட்டுவிடமுடியாமல் தவிக்கிறது
அசைந்தபடியே விலகிவிடும்
நினைவுகளோடு
மறக்கும் பொருட்டு உப்பரித்து
தனித்த தீவில் ஒதுங்கிவிடவும் கூடும்
ஏற்றத்தாழ்வின் அலைகள்
நீல நிறம் தவிர்த்து
கருஞ்சாம்பல் போர்த்தித்
திவலைகளாய் சிதறிக்கொண்டே இருக்கிறது
ஓய்வில்லா யுகம் முழுதும்..!
- இளங்கோ (
ஆழம் தொட முடியா நங்கூரத்தின் கெட்டித்த முனை
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.