தொடர்புடைய படைப்புகள்

இந்த சோடியம் விளக்கின்
கீழ் குரைக்கும் நாய்க்கு
எப்படி புரிய வைப்பது
நடு இரவில்
வேலை முடிந்து திரும்பிய
என் அலுவலகத் துன்பத்தை
ஒரு பயம் கலந்த உணர்வோடு
பயணிப்பதுதான்
மனித வாழ்வின் இயல்பு
எதைப் புரிந்து கொண்டு
இப்படிக் குரைக்கிறது
வாகன சப்தங்களையும்
பொருட்படுத்தாமல்
சாலையோரம் வரிசையாக
தூங்கும் சாலைவாசிகளுக்கு
பாதுகாப்புக் குரலாய்
இருக்குமென எண்ணி
மடமடவெனக் கடக்கிறேன்
இந்த சாலையை
ஒரு குற்ற உணர்வோடு.

- ப.தனஞ்ஜெயன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.