சீறிப் பாய்கிறது
அறச்சீற்றம்
கானல் நீராய்
கால்வாய்களின் வெடிப்பில்
கந்தலாகிக் கிடக்கிறது
உயிர்களின் பசித்த வயிறுகள்.
செழித்து நிலம் கிழிக்கும்
சீமைக் கருவேல மரங்களின்
வேர்களில் நொறுங்கிக் கிடக்கிறது
தலைமுறையின் தானியக் குதிர்கள்.
வந்துவிட்ட நீருக்காக
பெருங்கவலையுடன் கரையேறுகின்றன
அரச வாகனமான மணல் லாரிகள் ..

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.