திருவிழா
ஒரு நாள் கூத்துதானென்றாலும்
கொடும்பசியோடு காத்துக் கிடக்கிறது
துருவேறிய கத்தியும்
குரூரம் கவிந்த புத்தியும்
ரத்தம் குடிக்க.
செய்தவதறியாமல் காலுடைந்த நிலையில்
முழி பிதுங்கி நிற்கிறார்
எல்லையில் நின்றாலும்
எல்லையை விட்டு ஓடமுடியாத
காத்தவராயன்.

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.