ஒரு நெல் மணியை
விளைவிக்கத் தெரியாதவர்கள்
ஒரு திணை அரிசியை
விளைவிக்கத் தெரியாதவர்கள்
ஒரு சாமையை விளைவிக்கத்
தெரியாதவர்கள்
ஒரு கம்பரிசியை விளைவிக்கத்
தெரியாதவர்கள்
ஒரு காய் கனியை விளைவிக்கத்
தெரியாதவர்கள்
ஊரறிய விளைவிக்கிறார்கள்
கடவுள் தோட்டத்தின்
சாவி தங்களிடம்தான் விளைகிறதென்று
வெற்று வார்த்தைச் சவடாலில் .
வாய்விட்டுச் சிரிக்கிறார் கடவுள்..
சீடர்களின் செவிகளில் நூற்றாண்டுக் கழிவுகள்..!!

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.