அருகிருக்கும் மேசையில் வைக்கப்பட்ட
தனிமைக் கோப்பையில்
நிரப்பப்படுகிறது நினைவுமது

தீனிகள் கனக்கும் தட்டை
ஏந்தி வந்த பரிசாரகர்
மறுகையிலிருக்கும் கிடுக்கியில் நெருக்கி
மதுவுக்குள் போட
ஐஸ் கட்டியென மிதக்கிறேன்

நுரைக்கும் குமிழிகள் வெடிக்க
காற்றில் கலக்கிறது
துயரப் பாடல்.

சிவ.விஜயபாரதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.