வற்றிய முலைகளில் 
எஞ்சிய துளிகளைப் பருகி வாழும் சிசுவென 
நிலத்தின் மீது 
உழவு செய்து
பிழைக்கின்றன 
ஆதிகுடிகள்
 
குஞ்சுகளோடு பறவையையும் சேர்த்து
கொத்திப் பறக்க சிறகுகளை விரிக்கின்றன வல்லூறுகள்
 
கூடு சுமந்தலையும் நத்தைகளின் சாலையில்
அகண்டு விழும் இடியென
விரிகிறது 
எட்டு வழிச்சாலை
 
- சிவ.விஜயபாரதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.