மரத்திற்கு அடியில் விழுந்திருக்கும்
மலர்களில் ஒன்றை
இரு விரல்களால் மென்மையாக
எடுத்து அம்மாவிடம்
கொடுக்கும் குழந்தையின் பிரயத்தனம்
உன் சொற்களில்.

---

கடைவீதிகள் நிறைந்த ஊரில்
ஜவுளிகளோடும் பண்டிகை பட்சணங்களோடும்
சாரை சாரையாய் வந்து கொண்டும்
போய்க் கொண்டுமிருக்கும் மக்களுக்கிடையில்
ஆறாவது மாடியிலிருந்து
வேடிக்கை பார்க்கும் வேலையற்றவனின்
இரவில் சாமரம் வீசும் காதலியாய்
வாழவே விரும்புகிறாள்
பிரபல ஜவுளிக்கடையின் விளம்பர மாடல்.

- சீதா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.