நெடுந்தூரம்
மைல்கற்களால்
கட்டப்படுகின்றன

இரு பக்கங்கள் நகர்தல்
இரு கண்ணுக்கும்
விருந்து

உருள உருள பூமியும்
உருளுதல்
புரிதலின் மிரளல்

தொடுவானம் சேர்ந்து வருகிறது
தொட்டுவிட்டேனோ
மறதி வருகிறது

வேகம் கூடுதலில் விசுக்கென
கண் கூசிப் போகிறது
சற்றுமுன் முந்திய பகல்

இன்றே சென்று இன்றே
வந்து விட்டது
பயணம்

போகவும் இல்லை
வரவும் இல்லை
பாதை

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.