chess coinsஅவர்கள் இருவரும்
ஆளுக்கொரு பூனையை
மடியில் கட்டிக்கொண்டு
அருகருகே வசிக்கிறார்கள்.
எதிரியாக இருந்தாலும்
பூனை வளர்க்கும் விஷயத்தில் நண்பர்கள்.
இரண்டுக்கும் ஒரே தாய்தான் என்றாலும்
தாயினருகில் அண்ட விடுவதில்லை.
கருவாட்டுப் பானையின்
ருசி காட்டுவதில்லை.
'எலியும் பூனையுமாக' என்று சொல்லக்கூட
வாய்ப்புத் தருவதில்லை.
இப்படியாக அவை இரண்டும்
அவர்கள் இருவரையும் போல
ஒரே மாதிரி
வேறு மாதிரி வளர்ந்து
மடிவிட்டு இறங்க
நல்ல சகுனம் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

- மனோ ரெட்

Pin It