வனத்திடைத் துலாவி
கண்டடைதலின்
பிறகொரு நாளில்
வெட்டப்பட்டது மூங்கில்

துளைகள் நிரப்பப்பட
உயிர்த்தெழுகிறது

மழைப்பொழுதில் நனைந்த
பறவையொன்று சிறகுலர்த்தலின் பரவசமென
இசையை நிரப்பியிருந்தது

இதழுக்கான காத்திருப்பில்
பருவம் தப்பிப் போக
நிலமிழந்தவர்களின் சோகத்தை
உடுத்தியிருந்தது

படிந்திருக்கும் ஒட்டடைகளுக்குப் புரிவதில்லை
மீட்டப்படாத அதன் இராகங்கள்.

- சிவா விஜயபாரதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.