lovers

பின்னிரவில் உன்னை மட்டுமே
முன்னிருத்தி வந்த கனாவிலும்,
வனாந்திரத்தின் தனிமையிலும்,
எதிர்வரும் பிம்பங்கள்
உன் சாயலில் கடக்கையிலும்,
மார்கழி நாளில் சன்னலோர வரம்
கிடைக்கும் நிமிடங்களிலும்,
திரைப்படமொன்றில் பால்ய பருவ
காதல் காட்சிகள் காண நேரிடுகையிலும்,
உன் பெயர் தாங்கிய கடையொன்றின்
பெயர் பலகையில் தற்செயலாய்
கண்கள் நிலைகுத்தி நிற்பதிலும்,
சில கணங்கள் வாழ்ந்துவிட்டுத் தான் போகிறது.
அந்த "முதல் காதல்"....

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.