honor killings 243தனது எஜமானனின் தோரணையோடு
அந்த பங்களாவின் வாசலில்
அமர்ந்திருந்தது அந்த நாய் ..

நீண்ட பெரு மழையின் சப்தம்
முடிந்த பின்னிரவில்
வீதியின் நிசப்தமாய் ..வீடு !

அடிக்கொருதரம் எட்டிப் பார்க்கும்
மரங்கொத்தி பறவைபோல்
அம்மாவின் அம்மா கதவுக்குப் பின்னால் !

இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும்
செய்திக்காக அலைபேசியை அணைத்து
விடாமல் வைத்திருக்கும் எஜமானர் !

கண்ணீர் காய்ந்த முகத்தில்
தண்ணீர் தெளிக்கப் பட்டு விழித்தாள்
கனவுகளைப் பறிகொடுத்த எஜமானின் மகள்!

இதோ... பங்களாவினுள் திமு திமுவென்று
ஓடி வரும் கைத்தடிகள் பவ்யமாக
தரையில் வைத்தன அரிவாள்களை !

வாசலில் எந்த சலனமும் இல்லாமல்
அமர்ந்திருந்தது அந்த நாய்
தனது எஜமானனின் தோரணையோடு!

- கருணா

More articles by கருணா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.