பிரம்மன் பெற்றானாம்
நான்கு வருண
மனிதர்களை ....
முறையே
தலை, தோள்
தொடை, பாதம்
என....
இது உண்மையெனில்
பிரம்மனை
புணர்ந்தவன் யார் ?
முறையற்ற முறையில்
கண்ட இடத்தில் எல்லாம்
களமாடிய கயவன் எவன்?
அன்றி
பிரம்மன் உடலெங்கும்
பெண்குறி கொண்ட
பெருமகனோ?
ஐந்தாம் வருணத்தினான்
பஞ்சமனை
எங்கனம்
எவனுக்கு பெற்றான்?
எது எப்படியோ
விடை சொல்வீர்
பிரம்மனை புணர்ந்தவன்
யார்?