மார்புக் கூட்டில் மகிழம் பூக்களின்
மல்யுத்தம் மஞ்சள் மாலையில்
மறைந்திருந்து நீ பார்த்த முதல் ...
பகலிலும் விழாக் கோலம் பூணும் சொப்பனங்கள்
சாரல் நினைவுகளில் என் நித்திரையை
இரவுகளில் நீ ஆட்கொண்டதால் ...
என்னில் விளையாடும் சதுரங்கத்தில்
உன்னால் வெட்டுப்பட்டு விழும்போதெல்லாம்
சொர்க்கத்திலேயே விழ நேர்கிறது ...
இளஞ்சோலை நினைவுகளை இளமையாக்கிக் கொண்டே
நிதம் யுத்தம் செய்து என் செல்களை மட்டுமே
உயிரிழக்கச் செய்யும் உன் வெற்றிகள் ...
உன் விழி என்மீது படரும் நிமிடங்களில்
என் இதயத்தின் மௌன வாசலில்
தீபச் சுடர்களின் அரங்கேற்றம் .....
சீ ....போடீ!!! கோர்வையாக்க இயலவில்லை
எழுதும் என் கவிதையை
இதிலும் நீ வாசம் செய்வதால் ....
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
- விவரங்கள்
- ஜி.கே.
- பிரிவு: கவிதைகள்