புத்தக அலமாரி
எழுத்துகளின் உடை
வெளியே வந்த கதா பாத்திரம்
ஆறு வயது விதவை
நிகழ்கால பச்சையத்தை ருசித்தது
கதைகளின் சருமத்தால்
மூடியிருந்த வாழ்வைப் புரட்டியது
நிகழ்காலத்தை சுற்றிப்பார்த்த பின்
சருமத்தை உரிக்க முயன்று
தோற்ற பிறகு சொன்னது
ஒரு நாள் ஜெயிப்பேன்
இந்த புதிய மழைக்காற்றை
இந்த காலைப்பனியை
சுடும் இந்த இரவு வெப்பத்தை
இறந்த காலம்
சாபமிட்ட உடலை அவிழ்த்து
நிகழ்காலம்
ஆசீர்வதித்த புதிய உடலில் செருகுவேன்
நானே வீடாகி
நானே காற்றாகி
நானே நிரப்புவேன்
என் வீட்டை
என் வாசனை ததும்பும்
இரவு பகல்களால்
நிறைவடையாத கனவுகளோடு
சங்கமித்து
உயிர்ப்பை பிரசவிப்பேன்
ஒட்டிக்கிடக்கும்
பழைய விதிகளை எரிப்பேன்
என் காலம் ஏன் மோசமாக இருந்தது
இன்றைய சமூக சிந்தனை
அந்தக்கால மனித மூளைகளில்
இது ஏன் தோன்றவில்லை
மூடர்களின் காலமாக இருக்க
அதைப் பணித்தது யார்
இந்தக்காலம் போல அது
ஏன் சுதந்திரமாக இல்லை
வாழ்வு
காலியாகிவிட்டதென்று சொல்லி
என் கதவுகளை மூடி விட்டார்கள்
காமத்தின் சுனை
மூடி வைக்கத்தெரியாமல் உடலில்
காலத்தின் புதர்கள் படிந்து
சுரக்கத்தொடங்கிற்று
சுனை நீர்
குடித்து வளர்ந்த உறுப்புகளை
உணர்ச்சிகளை கொல்லத்தொடங்கினேன்
நான் கொன்றிருக்கக்கூடாது
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்