வெப்ப மீதியைப்
பகலவன்
வெளிச்சமாக்கி
வார்த்திருந்தான்
நிலாப் பொத்தல்வழி
புகலிடம் தேடிய
புழுக்கத்தைத்
தன்வசமாக்கிய
கனவுகளோடு
புரண்டுகொண்டிருக்கையில்
மருந்துண்ணியாகிவிட்ட
முதியவரின்
இறுதி ஈனக் குரல்
இருமலாய்க் குடிசை
இருள் கிழிக்க
எங்கோ
காற்றில் பரவிய
இசைமொழியைச்
சவ்வூடு பரவலாய்
இரவு பரவவிட்டிருக்க
அங்கே
அர்த்தப்பட்டுக்
கொண்டு இருந்தது
இருளின்
பயங்கரமும்
இரவின்
நிசப்தமும்.
- மகிவனி
RSS feed for comments to this post