செடியிலிருந்து மலர்கள்
மட்டும் உதிர்வதில்லை
கூடவே
பனித்துளிகள்,
மழைக்காலமெனில்
நீர்த்துளிகள்,
மேலும்
மலர் நடுவே
ஒரு சொட்டுத்தேன்
கூடுதலாக
நான்கைந்து சிறு எறும்புகள்
அதிலும் கூடுதலாக
உதிர்தல் தாங்காத சில
இதயங்கள்
மலர்கள் மட்டும் உதிர்வதில்லை
More articles by ரவி உதயன்
- ஆட்டம் (18 நவ 2010)
- இரண்டும் ஒன்றுதான் (09 நவ 2010)
- முத்தம் - சில குறிப்புகள் (19 ஆக 2010)
- மிகு வலி (13 ஆக 2010)
- தேவதைகளின் கதைகள் (10 ஆக 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.