பறவைகள் கூடுதிரும்புகின்றன
குஞ்சுகளுக்கு இரையோடு
குழந்தைகள் வீடுதிரும்புகின்றன
தாய்க்குச் சொல்லக் கதைகளோடு.
பொம்மைகளோடும்
பேசுகின்றன குழந்தைகள்
குழந்தைகளோடும்
பேசுவதில்லை நாம்.
அடித்த தாயையே
கட்டிக்கொண்டழுகிறது
ஆறுதல் சொன்னவர்களை
விட்டுவிலகியோடுகிறது.
குழந்தைகள் உறக்கத்தில் முணுமுணுக்கின்றன
தேவதைகளின் கதைகளை வாசிக்கின்றன.
- ரவி உதயன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பரந்தூர் மக்கள் அகதியாவதா தீர்வு?
- பாவிகள்
- நினைவு
- நீயென் ஆதூரன்
- குழந்தை வளர்ப்பும் சுகாதாரமும்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்