*
கொஞ்சமும் நிதானம் இழக்கவில்லை நீ
குரலில் சிறு பதற்றமுமற்று
சொல்ல முடிகிறது
ஒரு பிரிவை
தேன்கூட்டைப் போல் பொறுமையாக
கட்ட முடிந்திருக்கிறது
அறை அறையாகக் காரணங்களை
கசக்கும் பூக்களிலிருந்து
வலிக்காமல் இனிப்பெடுக்க முடிகிற
உன்னால் மட்டுமே
அதில் நஞ்சையும் அளவு பார்த்து சேர்க்க முடிகிறது
கொஞ்சமும் நிதானமிழக்கவில்லை நீ
எந்தவொரு பதற்றமுமில்லை குரலில்
ஆனால்
சொல்ல முடிந்திருக்கிறது
காலத்துக்கும் ரீங்கரிக்கப் போகும்
ஒரு பிரிவை
*****
-- இளங்கோ (
அறை அறையாகக் கசக்கும் காரணங்கள்..
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.