*
கொஞ்சமும் நிதானம் இழக்கவில்லை நீ
குரலில் சிறு பதற்றமுமற்று
சொல்ல முடிகிறது
ஒரு பிரிவை
தேன்கூட்டைப் போல் பொறுமையாக
கட்ட முடிந்திருக்கிறது
அறை அறையாகக் காரணங்களை
கசக்கும் பூக்களிலிருந்து
வலிக்காமல் இனிப்பெடுக்க முடிகிற
உன்னால் மட்டுமே
அதில் நஞ்சையும் அளவு பார்த்து சேர்க்க முடிகிறது
கொஞ்சமும் நிதானமிழக்கவில்லை நீ
எந்தவொரு பதற்றமுமில்லை குரலில்
ஆனால்
சொல்ல முடிந்திருக்கிறது
காலத்துக்கும் ரீங்கரிக்கப் போகும்
ஒரு பிரிவை
*****
-- இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம்
- ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும்
- பரந்தூர் மக்கள் அகதியாவதா தீர்வு?
- பாவிகள்
- நினைவு
- நீயென் ஆதூரன்
- குழந்தை வளர்ப்பும் சுகாதாரமும்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்
அண்ணா.......... :-) :-)
வலிக்காமல் இனிப்பெடுக்க முடிகிற
உன்னால் மட்டுமே
அதில் நஞ்சையும் அளவு பார்த்து சேர்க்க முடிகிறது ///
நன்றி..!
தேனப்பன் & ராம்
RSS feed for comments to this post