விழுந்த பல்லை
சாணியில் சுற்றி
கூரையில் எரியும் போது
குழந்தை கேட்டது
"கூரையில்
பூசணிப்பூக்கள்
இப்படித்தான் பூக்கிறதா?"

***

பிச்சையெடுக்கும்
குழந்தைகளைப் பார்த்து
பாவப்படும் என் குழந்தையிடம்
நாடு நாடாக இந்தியா கையேந்துவதை
எப்படிச் சொல்வது?

- ப.கவிதா குமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.