கவிழ்ந்த தென்னங்கீற்றாய்
விரிந்த பஞ்சுத்தலை கோதி
கால் நீட்டிக் கிடக்கும்
கிழவியைப்
போக வரப் பார்த்திருக்கிறேன்...
ஒருவேளை
இவள் அறியக் கூடுமென,
ஒருநாள் கேட்டேன்
புதிய வீட்டின்
வாசலோரப் பூஞ்செடிகள்
எத்தனை குடம்
நீரூற்றியும்
ஒரு பூ கூட பூக்காததன்
மர்மத்தை..!
தளும்பத் தளும்ப
நீர் நிறைந்திருந்த
குளத்துக்கு
குடங்கள் போதாதென
வன்மமாய்ச் சிரித்தாள்...
மனநிலை பிறழ்ந்தவளோ
என நழுவியபோது
பின்னால் சொல்லிக்கொண்டிருந்தாள்
வீடுகளாகிவிட்ட
குளக்கரையில் வெகுகாலமாய்
கூட்டிய செங்கல்லினுள் சிற்றகலாகக்
காவலிருந்த
பேச்சி
தான்தானென்று...!

- உமா மோகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.