அங்கம் தனிலே பங்கம் இருப்பினும்
மங்கிய மனதுடன் பிறந்திட்ட போதிலும்
இயலா நிலைமைக்கு இரங்காது இம்மண்
முயலும் மனிதர் உழைப்பை ஈந்து
உற்றதைக் காப்பது சமூகக் கடமை
சுற்றம் வாழ வேண்டிய பொருள்பெற
மண்ணே தாயென உழைப்பே தந்தையெனத்
திண்மையாய் இருப்பது இயற்கையின் நிபந்தனை

(ஒருவர் உடல் உறுப்புக் குறையுடன் பிறந்து இருந்தாலும், மன வளர்ச்சிக் குறைவுடன் பிறந்து இருந்தாலும் (அவர்களால் உழைக்க) முடியாத நிலைமையைக் கருதி (உழைக்காமல் அவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பதற்கு) பூமி இரக்கம் காட்டாது. உழைக்க முடியக் கூடிய மற்ற மனிதர்கள் தங்கள் உழைப்பை ஈந்து அவர்களைக் காப்பது சமூகக் கடமையாகும்.  மனிதர்கள் தாங்கள் வாழ்வதற்கு வேண்டிய பொருட்களை, இப்பூமியைத் தாயெனக் கொண்டும் உழைப்பைத் தந்தையெனக் கொண்டும் பெற வேண்டும் என்பது இயற்கை விதித்துள்ள (மாற்ற முடியாத) நிரந்தர நிபந்தனையாகும்)

- இராமியா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.