இன்றிரவு தூங்காமல் வெளியே நிற்கிறேன்
தூக்கத்தின் சாவியைத் தொலைத்துவிட்டேன்
தூக்கத்தின் பிம்பம் வந்து வந்து போகிறது
தூக்கம் என்னுடைய சிறந்த நண்பன்
அது நேசித்த பெண்களை சந்திக்க வைத்திருக்கிறது
தூக்கம் ஒரு செடிபோல தொட்டியில் வளர்ந்து கொண்டிருக்கிறது
அது சில சமயம் வாசனை மிக்க மலரைத் தருகிறது
சிலசமயம் நீரற்று வதங்கிப் போகிறது
தூக்கம் எனக்காக காத்திருக்கிறது
என் கவிதையை எழுதி முடிக்கும் வரை
ஆனாலும் தூக்கத்தை நம்பி விட முடியாது
ஒரு நாள் நடுவழியில்
நிராதரவாக விட்டுவிட்டுப் போய் விட்டது
அன்றைய இரவில் இறந்து போனவர்கள்
சந்தித்து ஆறுதல் சொன்னார்கள்
இளமைக்கால நண்பர்கள்
தன் முகங்களை புதுப்பித்துக் கொண்டார்கள்
தூக்கம் திடப்பொருளாகவோ திரவமாகவோ
காற்றாகவோ மாறிக் கொள்கிறது
தூக்கம் சில சமயம் இரவின் சாபமாகிறது
சில சமயம் காதலியைப் போல மடியில் விழுகிறது
மனைவியை விட தூக்கம் தான்
என் உடலை தன் மடியில் வைத்துக் கொண்டிருக்கிறது
தூக்கம் வராமல் ஏமாற்றும்போது
இரவின் குவளையை உடைப்பது
புதிய வழக்கமாகிக் கொண்டிருக்கிறது.
தொலைந்துபோன தூக்கத்தின் சாவி
More articles by கோசின்ரா
- உன் கொடூரத்தை எனக்கு மட்டும் பங்கிடு (22 ஆக 2015)
- ஒளிரும் வானம் (14 மே 2015)
- கண்களிலிருந்து விடுதலை செய்! (06 மே 2015)
- என் சாம்பலில் உன்னைத் தேடாதே (30 ஏப் 2015)
- முதல் முத்தம் (22 ஏப் 2015)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.