காதலிக்கத் தொடங்கும் போதே வெளியேறி விட்டாள்.
கடுகளவு கூட தயக்கமில்லை.
வெளியேறிவிட்டாளென்பதைக் கூட அறியவில்லை
கேட்கமுடியாது கேட்டால் உனக்குள் எப்போது வந்தேனென்பாள்
ஞாபகமறதிக்காரி
உதடுகள் வழியே அவள் வெளியேறியிருக்க முடியாது
முத்தங்கள் உடலின் மூடி வைத்த கதவுகளை
திறந்து விடுகின்றது என்பாள்
கண்களின் வெளிச்சத்தில் வெளியேறியிருக்க முடியாது
உங்கள் கண்கள் கூர்மையாக கவனிக்கிறதென்று சொல்லியிருக்கிறாள்.
எப்படி வெளியேறினாள் தெரியாது
எனக்கு முன்பு நடந்து போய்க் கொண்டிருக்கிறாள்
எந்த ஒட்டுமில்லை, உறவுமில்லை யென்பதைப் போல
புதிதாக அவளைக் காதலிப்பவர்கள் சொல்லக் கூடும்
அவள் தன் உடலில் நடந்து கொண்டிருப்பதாக.
சுயமறிதல்
More articles by கோசின்ரா
- உன் கொடூரத்தை எனக்கு மட்டும் பங்கிடு (22 ஆக 2015)
- ஒளிரும் வானம் (14 மே 2015)
- கண்களிலிருந்து விடுதலை செய்! (06 மே 2015)
- என் சாம்பலில் உன்னைத் தேடாதே (30 ஏப் 2015)
- முதல் முத்தம் (22 ஏப் 2015)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.