நவீனம் மிதக்கும் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் காலம்
தன் பொது ஒழுக்கத்தின் விரலை
வாயில் வைத்து சப்பிக் கொண்டிருந்தது
வெறுப்பையோ, நிறபேதத்தையோ
பிரசவிக்கும் மனிதனை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது
பெண்ணின் கர்ப்பகாலம் போலில்லை ஆணுடையது
குரோதத்தையோ, வன்மத்தையோ கருத்தரித்த
சில வினாடிகளில் பிரசவிக்க முடியும்
சாதிவெறியை கருத்தரிக்க மனிதன் ஒருவன்
தன் சக மனிதன் வாயில் மலத்தை திணிக்கிறான்
இந்த வன்முறை அசாதாரண நிகழ்வு
அசாதரண நிகழ்வுகளால் ஆக்கப்பட்டிருக்கிறது
நம் ஊர்கள்
மலத்தை ஊட்டியவன் அதே கையில்
தன் குழந்தைக்கு சோறுட்டுகிறான்
மலம் தின்றவன் சடலத்திலிருந்து
மீண்டெழுந்து போகிறான் உயிர்த்தெழாமலே
கோபமடைந்த கிழவி
புனித நூல்களின் பக்கங்கள் கிழித்து
வாசலில் கிடந்த பன்றியின் மலத்தை
வாரியெடுத்து குப்பைலெறிகிறாள்
எல்லாவற்றையும் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்த நாயொன்று
ஓடி ஒளிந்த கடவுளை
கவ்வி வந்து வெளியே போட்டு
தன் ஒரு காலை தூக்கிற்று
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இதற்குப் பெயர்தான் சமூக நீதியா?
- குடிஅரசு 100
- பூமியில் வந்து விழும் உயர் ஆற்றல் துகள்கள்
- ஜூன் 4, வரலாறு மாறும்!
- குறிச்சி என்பது?
- பரப்புரை பயணக் காட்சி - பாசிசம் வீழ்வதற்கான சாட்சி
- எச்சங்களிலான நிலம்
- ஜன நாயகமா? பண நாயகமா?
- கருஞ்சட்டைத் தமிழர் மே 04, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- ‘குடிஅரசு’க்கு வயது 100
பார்த்துக் கொண்டிருந்த நாயொன்று
ஓடி ஒளிந்த கடவுளை
கவ்வி வந்து வெளியே போட்டு
தன் ஒரு காலை தூக்கிற்று....
நண்பர் கோசின்ராவிற்கு. ..இரு மாதமாயிற்று...க ீற்று வலைதளம் பார்த்து...மன்ன ிக்கவும்..காலதா மதத்திற்கு...நா மே படைத்த கடவுளை நாமே எப்படி பழிப்பது..
RSS feed for comments to this post