*

பாதையோரமாய்

கசங்கிக் கிடக்கிறது

யாரோ ஒருவர்

தவறவிட்டுச் சென்ற

பிரபஞ்சமொன்று

 

அதனுள் நிரம்பி நிற்கும்

அழச் செய்த

ஆதங்கங்களை

சமுத்திரத்தின்

பேரலைகளோடு

ஒப்பிடலாம் ..

 

நிஜ உலகின்

பூவொன்று

மலரும் அதிர்வில்

துகள்களாகச்

சிதறிப்போனது

அண்ட சராசரத்தின்

பெரும் பகுதி ஓன்று..

 

***

- கலாசுரன்

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.