இதழோரப் புன்னகையிலிருந்து
பிய்த்தெடுத்த
கனவொன்றை
விழியம்பால்
சிதைக்க
விருப்பமின்றி
மூடிக்கொள்ளும் கண்கள்

உச்சாடனம் செய்ய முடியா
வார்த்தைகளின் விம்மல்
ஒளி நடுவிலான
புள்ளி இருளாய்
பிரஞ்ஞையின் தாள்மேல்
பத்திரப்பட்டிருக்கிறது

தொலைவற்று
கண்ணெதிரில் விரியும்
சலனமற்ற வானில்
வழிநீர் படைத்த
தீத் துளிகள்
ஓய்வில்லாது
ஓடுகின்றன

இரத்த நாடிகளை
முறுக்கேற்றி
வேகமாய்ப்
பயணிக்கும் குருதி
நயவஞ்சகத்தின்
வலியை
பக்கவாட்டில்
சிதறச் செய்கிறது..

அணுவணுவாய்
சிதைந்து
உதிரும்
சிந்தனைகளைப்
பெருக்கி
மதியற்ற மனம்
தன்னையே
வலிக்கச் செய்கிறது

இன்னுமொரு
நயவஞ்சகத்தின்
வலி
குற்றுயிராம்
இம்மனத்தை
முற்றிலும்
கொன்றுவிடும்

பிறகு
பைத்தியமென
இவ்வுலகம் சிரிக்கும்
கூடவே
கொலை செய்யப்பட
இந்த மனமும்..

***
கலாசுரன்

இதழோரப் புன்னகையிலிருந்து
பிய்த்தெடுத்த
கனவொன்றை
விழியம்பால்
சிதைக்க
விருப்பமின்றி
மூடிக்கொள்ளும் கண்கள்

உச்சாடனம் செய்ய முடியா
வார்த்தைகளின் விம்மல்
ஒளி நடுவிலான
புள்ளி இருளாய்
பிரஞ்ஞையின் தாள்மேல்
பத்திரப்பட்டிருக்கிறது

தொலைவற்று
கண்ணெதிரில் விரியும்
சலனமற்ற வானில்
வழிநீர் படைத்த
தீத் துளிகள்
ஓய்வில்லாது
ஓடுகின்றன

இரத்த நாடிகளை
முறுக்கேற்றி
வேகமாய்ப்
பயணிக்கும் குருதி
நயவஞ்சகத்தின்
வலியை
பக்கவாட்டில்
சிதறச் செய்கிறது..

அணுவணுவாய்
சிதைந்து
உதிரும்
சிந்தனைகளைப்
பெருக்கி
மதியற்ற மனம்
தன்னையே
வலிக்கச் செய்கிறது

இன்னுமொரு
நயவஞ்சகத்தின்
வலி
குற்றுயிராம்
இம்மனத்தை
முற்றிலும்
கொன்றுவிடும்

பிறகு
பைத்தியமென
இவ்வுலகம் சிரிக்கும்
கூடவே
கொலை செய்யப்பட
இந்த மனமும்..

***
- கலாசுரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.