நம் முத்தங்களின்
எச்சில்களில் நமக்கான
கரைகளைக் கழுவிய
அந்த தினங்கள் மறைந்து
கானல் நீராய் விரிகிறது.
இடையில் முளைத்த
உன் மீதான வெறுப்புகளை
அள்ளிப் போட்டுக் கொண்டு
கண்களை அகல விரித்து
கானல் நீர் நோக்கி
என் வாகனத்தை
விரைக்கிறேன்.
பொட்டல் காடுகளுகளின்
தலைக்கு நேர் வகுடு
எடுத்ததாய் நீளும் சாலையின்
தொலைவில் பல்லிளித்து
அழைக்கும் கானல் நீர்களை
மோதிக் கொன்று விட்டு
நகர்கிறது என் வாகனம்
என் பிணத்தை
ஏற்றிக் கொண்டு.
- சோமா (
கானல் நீர் தினங்கள்
More articles by சோமா
- சுதந்திர தின ஆஃபர் - ஷாப்பிங் மால்கள் (15 ஆக 2012)
- எழுதப்படாத கவிதை (27 ஜூலை 2012)
- எதையும் மிஞ்சவிடாது உலகமயமாக்கல் (23 ஜூலை 2012)
- ஒரு புத்தன் ஜனிக்கட்டும் (05 மே 2012)
- நேற்றைய குண்டுகள் (24 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.