உறக்கம்
வாராத இரவுகளில்
மணியடித்தபடி
நிற்காமல் விரைகிற
குல்ஃபி வியாபாரி
விற்றுச்செல்வது
உறைந்து புகைகிற
என் கனவுகளையா...?
*****************
கனவுதானே
என்ற அலட்சியத்தோடு
நீ கேட்கவிழைகையிலெல்லாம்
சொல்லவந்ததைப்
பாதியில் நிறுத்துகிறேன்.
"கனவுகளில்
எத்தனை அன்பானவனாய்
நீயிருந்தாய்"
என்பது துவக்கவாக்கியம்
****************
பயணத்தின் ஜதிக்கேற்ப
நடனமாடும் உடல்.
உன் போலவே வந்தது தெரியாமல்
அணைக்கும் உறக்கம்.
யாருடைய கைரேகைகளிலோ
ஓடிக்கொண்டிருக்கும் இரயில்பொம்மை.
இரவு ஒரு கனவு.
தொடர்புடைய படைப்புகள்
3 கனவுகள்
- விவரங்கள்
- ஆத்மார்த்தி
- பிரிவு: கவிதைகள்
More articles by ஆத்மார்த்தி
- எழுத்துக்காரனுக்கு எப்போதாவது வாய்க்கும் இது போன்ற விழாக்கள் (18 ஆக 2014)
- ஐந்து (09 மே 2013)
- என்ன செய்யப் போகிறோம் மதுவை..? (03 ஏப் 2013)
- வதனம் அமைப்பின் நூல் விமர்சனக் கூட்டம் (15 மார் 2013)
- மகா கவனத்தின் விளைதல் பிழை (17 ஜன 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.