இலக்கிய மேடையில்
இருமிக்கொண்டே பேசுகிற
ஒடிசல் தேகன்
எடுத்தெறிந்து கொண்டிருந்தான்
வார்த்தைகளை.
சில நாட்களுக்கு முன்னர்
இதே மேடையில்
பளுதூக்கும் காட்சியொன்று
நடந்ததாய் நினைவு.
உற்றுப்பார்க்கையில்
இலக்கியம் பேசிக்கொண்டிருந்தவன்
பளுத்தூக்கவியலாது
வாயில் ரத்தம்
வழியச்சரிந்துகொண்டிருக்கிறான்.
அரங்கவாயிலில்
பளுதூக்கும் வீரன் சொன்ன கவிதைக்காக
அனைவரும் கைதட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அவன் வீட்டுக்குக் கிளம்பிச்செல்வதை
ஒலிப்பெருக்கி அமைப்பாளன்
கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
இடவலமாற்றம்
- விவரங்கள்
- ஆத்மார்த்தி
- பிரிவு: கவிதைகள்
More articles by ஆத்மார்த்தி
- கடுகும், கற்பூரமும் கமழும் கதைவனம் (25 ஆக 2026)
- எழுத்துக்காரனுக்கு எப்போதாவது வாய்க்கும் இது போன்ற விழாக்கள் (18 ஆக 2014)
- ஐந்து (09 மே 2013)
- என்ன செய்யப் போகிறோம் மதுவை..? (03 ஏப் 2013)
- வதனம் அமைப்பின் நூல் விமர்சனக் கூட்டம் (15 மார் 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.