*
எங்கிருந்து தொடங்குவது
என்றொரு கணம்
அடுக்கி வைத்திருக்கும்
புத்தக இடைவெளியில் நெளிகிறது
லாவகமான நிமிடங்களை
அபகரித்துக் கொள்ளும்
பார்வையின் முள் நிரடிச் சலிக்கிறது மௌனத்தை
எதிர் நாற்காலியின் வெறுமையை
அமைதியாக மெழுகிக் கொண்டிருக்கிறது
விளக்கொளி
வார்த்தைகளை
அரைத்துச் சுழலும் மின்விசிறி இழை
ஒவ்வொரு பக்கத்தின் எண்களையும்
சுழற்றி வீசுகிறது வாசல் நோக்கி..
*****
--இளங்கோ (
பார்வையின் முள்
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.