தெரிந்த வகையில்
மண்வீடு கட்டி விளையாடினர்கள்
பலத்த காற்று வீச
கலைந்த மண்வீட்டை கண்டு
ஒருகணம் முழித்தாள்
மறுகணம் சிரித்தாள்
மறுபடியும் மண்வீடு கட்டி
சுற்றிசுற்றி விளையாடி சிரித்தார்கள்
மண்வீட்டை மிதித்தும் சிரித்தார்கள் !

குளிர்காற்று ஈரத்தில் சளி பிடிக்குமென
வேகமாக வீட்டிற்குள் இழுத்து சென்றதும்
படபடக்கும் திரைசீலையை பிடித்தவாறே
குழந்தை சொன்னாள் -
’அம்மா, வேர்க்குது ...’

- கே.சித்ரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.