பிரவாகமாக ஓடி கொண்டிருக்கையில்
அருவியாய் பாறைகளில் புகுந்து
வந்த வலிகளை சொல்ல வேண்டியதில்லை
யாருக்கோ ஊக்கமளிக்கும் என்றாலொழிய..
கடலுக்குள் கலந்த அமைதியில்
பிரவாகமாக ஓடிய பிரபாவத்தை
சொல்லுகிற தேவையும் இருக்காது.
அதிகபட்ச வலி மிகுந்த கதையொன்றை
சொல்லியே ஆக வேண்டுமெனின்
ஊற்றாய் புறப்பட வேண்டியதை
மலை உச்சியிலிருந்து தள்ளி ஓடவிட்ட
துரோகத்தை வேண்டுமானால் சொல்லலாம்.
- சித்ரா (
சொல்ல விரும்பாத கதை
More articles by கே.சித்ரா
- நானும் தான் (04 நவ 2018)
- நீங்கள் கிளம்பலாம்! (06 ஜூலை 2017)
- சாப விமோசனம் (13 அக் 2014)
- ஆட்டகளம் (30 ஜன 2013)
- எப்படி.. இப்படி.. (30 ஆக 2011)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.