பிரவாகமாக ஓடி கொண்டிருக்கையில்
அருவியாய் பாறைகளில் புகுந்து
வந்த வலிகளை சொல்ல வேண்டியதில்லை
யாருக்கோ ஊக்கமளிக்கும் என்றாலொழிய..

கடலுக்குள் கலந்த அமைதியில்
பிரவாகமாக ஓடிய பிரபாவத்தை
சொல்லுகிற தேவையும் இருக்காது.
 
அதிகபட்ச வலி மிகுந்த கதையொன்றை
சொல்லியே ஆக வேண்டுமெனின்
ஊற்றாய் புறப்பட வேண்டியதை
மலை உச்சியிலிருந்து தள்ளி ஓடவிட்ட
துரோகத்தை வேண்டுமானால் சொல்லலாம்.
 
- சித்ரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It