தனக்கான சமூகம்
ஏதுமின்றி தன்னந்தனியாய்
உலாவருகிறது தண்ணீர் தொட்டியில்
அந்தத் தங்க மீன்...

குட்டிபோட்ட பூனையாய்
குறுக்கும் நெடுக்குமாய்
அவசரமாய் உலவிவிட்டு
தன்னைத் தனிமைப்படுத்தியவனின் மீது
மெளனமாய் முனுமுனுக்கிறது
அதன்போக்கில் ஒரு சாபத்தை...

- ராம்ப்ரசாத் சென்னை(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.