*
நீரலையில் நெளியும் கனவுகள் என
கரையோரம் நீண்டு வளர்ந்திருக்கிறது மனம்

கல்லெறிந்து விரியும் வளையங்களை ஒத்திருக்கிறது
நீ மூச்சு விடாமல் வீசும் வசவு

கோர்த்துக் கொள்ளவோ குலுக்கிக் கொள்ளவோ
நீள்வதாக இல்லை நட்பாக கைகள்

ஒவ்வொரு தனித்த இரவுகளின் அகாலத்தில்
கண்ணுக்குள் துரோக நிழலாய் படிந்து நகர்கின்றன
யாதொரு கோரிக்கைகளும் அற்று நம் தருணங்கள்

இன்னும்
விளக்கங்கள் எழுதிக் கொண்டிருப்பதாக
வழிப்போக்கன் ஒருவன் சொல்லிப் போகிறான்
உன் தகவலை

மறுக்கும் நிதானமிழந்து சரிவில் உருள்கிறது
வடிவம் பெரும் நோக்கமற்ற இந்த மௌனம்

சொல்லின் செதில்கள் மூச்சு விடுகின்றன
அழுத்தும் அர்த்தங்களின் பிராணவாயுவை
உள்ளிழுத்தபடி..

கரையோரம் நீண்டு வளர்ந்திருக்கிறது மனம்

****
    --இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.