*
நினைவின் படுதா கிழிந்து
இரவு பெருகி வழிகிறது
பிடிக்குள் சிக்க மறுக்கும் வார்த்தைகளோடு
நிகழும் போரின் கூர்மையில்
சிந்துகிறது ரத்தப் புள்ளிகள்
உங்கள் ஏடுகளின் அடுக்குகளில்
படிந்து விட்ட தூசுகளை
ஆழ உறிஞ்சுங்கள்
வரலாற்றுக் கதாப்பாத்திரங்களின்
அபத்தங்கள் யாவும்
உங்கள் இதயத்தில்
ஒரு
கேன்ஸர் போல பரவட்டும்
நிராசையின் கண்ணாடிக் குடுவைக்குள்
கொட்டித் தீர்க்க சேமித்து வைத்த
உங்கள்
உரையாடல்களின் துயரம்
இந்த அகாலத்தின் இலை நரம்பில்
ஊர்ந்து கொண்டிருக்கிறது
ஒரு துளி தூக்கமென
பெருகி வழிகிறது
மேலும்
ஓர் இரவு
****
--இளங்கோ
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்