*
நினைவின் படுதா கிழிந்து
இரவு பெருகி வழிகிறது
பிடிக்குள் சிக்க மறுக்கும் வார்த்தைகளோடு
நிகழும் போரின் கூர்மையில்
சிந்துகிறது ரத்தப் புள்ளிகள்
உங்கள் ஏடுகளின் அடுக்குகளில்
படிந்து விட்ட தூசுகளை
ஆழ உறிஞ்சுங்கள்
வரலாற்றுக் கதாப்பாத்திரங்களின்
அபத்தங்கள் யாவும்
உங்கள் இதயத்தில்
ஒரு
கேன்ஸர் போல பரவட்டும்
நிராசையின் கண்ணாடிக் குடுவைக்குள்
கொட்டித் தீர்க்க சேமித்து வைத்த
உங்கள்
உரையாடல்களின் துயரம்
இந்த அகாலத்தின் இலை நரம்பில்
ஊர்ந்து கொண்டிருக்கிறது
ஒரு துளி தூக்கமென
பெருகி வழிகிறது
மேலும்
ஓர் இரவு
****
--இளங்கோ
அகாலத்தின் இலை நரம்பு..
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.