1.

கடல் அலையில் கால் நனைத்தது

நீதான்...

பார்த்துக்கொண்டிருந்த

என் நெஞ்சு

நனைந்துவிட்டது...

 

2.

அடைமழையில்

நனைந்து கொண்டிருந்தோம்

நாம்...

மொட்டைமாடியில்,

ஒரே கொடியில்,

அருகருகே

உன் சுடிதாரும், என் சட்டையும்...

 

3.

நான்

கிள்ளிய இடத்தில்

ரத்தம் கட்டிவிட்டதென்று

புலம்புகிறாயே...

ரத்தம் கட்டிய இடம்

என்னைக் கிள்ளியதை

அறிவாயோ?...

- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.

Pin It