*
நான் இங்கு இல்லை என்கிற
மறுப்புத் தகவலோடு

தலைக் கவிழ்ந்து
நடை தொய்ந்து
கிளம்பிப் போன நண்பனின்
மரணச் செய்தி..

அதிகாலை
தொலைபேசி வழியே வந்த போது..

இரவெல்லாம் அழுதிருந்தன
ஜன்னல் கண்ணாடிகள்..

****
- இளங்கோ

Pin It