எனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும்
நாட்கள் மாதங்கள் வருடங்கள்
காலம் கடந்த‌ இடைவெளி விட்ட
சந்திப்பு...
மதுவின் வாசம் அறை எங்கும்
பரவிக் கிடக்க
மதுவின் நிறம் மாறி மாறி
அவன் கண்களைப் போல் கரும்சிவப்பு
நிறமாகியது...
போதையின் உச்சத்தில்
கச்சை கட்டி உக்கிரத்தில் ஆடும்
சுடலையாய்ப் பாடினான்
கவனிப்பாரற்றுக் கிடக்கும்
வாதையின் கவிதையானான்
சுடலையாய், வாதையாய் மாறிய
அவனை மது குப்பிக்குள் அடைத்து
என் கவிதைக்குள் ஊடுருவ விட்டேன்
நாட்கள் கடந்தும் கவிதைக்கும் எனக்குமாய்
கூடு விட்டு கூடு பாய்ந்து கொண்டுருக்கிறான்
அவன்...

- ஐயப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.