சில வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விளம்பரம் 'புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?' என்பது. மக்களிடம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட அந்த விளம்பரம் மக்களிடம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது. தமிழகத்தில் இதனால் எய்ட்ஸ் பாதிப்பு கணிசமாகக் குறைந்தது. ஆனால் இப்போது மீண்டும் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் பரவும் அபாய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த முறை எய்ட்ஸை பரப்புவதற்கென்றே திட்டமிட்ட முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட சித்தாந்தத் தெளிவோடு கூடிய நபர்கள் களத்தில் இறக்கிவிடப்பட்டு இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் இந்து மதத்தைப் பரப்புகின்றேன் என்ற போர்வையில் மீண்டும் தமிழ்நாட்டில் எய்ட்ஸை பரப்பிக் கொண்டு இருக்கின்றார்கள். அதனால் அரசு உடனே விழித்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்றவற்றைச் சேர்ந்தவர்களுக்கு HIV பரிசோதனையைச் செய்ய வேண்டும்.

bjp cadre murderமேற்குறிப்பிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஆண்களுக்கு (இப்போதைக்கு அவர்கள் மட்டும் தான் மாட்டி இருக்கின்றார்கள்) பெண் கொடுக்க நினைக்கும் இந்துப் பெற்றோர்கள் யோனிப் பொருத்தம் பார்ப்பதற்கு ஜோசியக்காரனிடம் போவதற்கு முன், வருங்கால மாப்பிள்ளைக்கு HIV இருக்கின்றதா என்று அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்துவிடுங்கள். ஏனென்றால் காலமும் கெட்டுப் போய் கிடக்கின்றது, கட்சியும் கெட்டுப்போய் கிடக்கின்றது. முன்பெல்லாம் அங்கொன்றும், இங்கொன்றுமாக எவனாவது பாலியல் வழக்கில் மாட்டுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் தினமும் மாட்டிக்கொண்டே இருக்கின்றார்கள். அதுவும் மாட்டும் அனைவரும் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற தீவிர இந்துக் கொள்கையைக் கடைபிடிப்பவர்களாய், அதைப் பரப்புபவர்களாய் இருக்கின்றார்கள்.

இந்துக் கொள்கைகளைப் பரப்புவதற்காக இந்து புராணங்களைப் படித்து, படித்து இவர்கள் முழுமையான இந்துவாகவே மாறிவிட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்துக் கொள்வது, கூத்தியாள்களை வைத்துக் கொள்வது, அடுத்தவன் மனைவியுடன் குடும்பம் நடத்துவது, கள்ளக் காதல் தொடர்பு வைத்திருப்பது, காதலிப்பதாய் சொல்லி கர்ப்பமாக்கி கொலை செய்வது, ஊர் மேய்வது என சகல இந்து வாழ்வியல் நெறிகளையும் கடைப்பிடித்து வாழ்கின்றார்கள். இடம், பொருள் பார்த்தெல்லாம் இதை அவர்கள் செய்வதில்லை சட்டமன்றமாக இருந்தாலும், ஆளுநர் மாளிகையாக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாமே அந்தப்புரங்கள் தான். இன்னும் பாராளுமன்றத்தில் மட்டும் தான் அவர்கள் தன்னுடைய ஆபாசக் கூத்துக்களை நிகழ்த்தவில்லை. அதுவும் மோடியின் ஆட்சி முடிவதற்குள் நடைபெறும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

ஆனால் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி வகையாறாக்கள் இவ்வளவு கீழ்த்தரமான ஆபாசக் குப்பைகளாய் இருக்கும் போதும், அவர்கள் எல்லாம் ஏதோ தேசத்தைக் காப்பாற்ற வந்த உத்தமர்கள் போன்று தங்களை சொல்லிக் கொள்வதுதான் வெட்கக்கேடு. தமிழ்நாட்டில் சீண்டுவார் யாருமின்றி ஒரு கேவலமான ஜந்துக்களைப் போன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த ஜென்மங்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்பவர்கள் என்பதை நாம் ஏற்கெனவே பலமுறை பார்த்திருக்கின்றோம். தமிழ்நாட்டில் பல கரசேவை காலிகள் கொல்லப்பட்ட சம்பவங்களில் எல்லாம் பெரும்பாலும் பெண்தொடர்புகள், ரியல் எஸ்டேட், கந்துவட்டி போன்ற காரணங்களே இருந்துள்ளன. எப்படியாவது இந்துப் பெருமையை நிலைநாட்ட உயிர்கொடுத்த, ஒரு பாரத மாதாவின் புதல்வனை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் என்ற அவர்களது முயற்சி தொடர்ந்து படுதோல்வியையே சந்தித்து வருகின்றது. அதுவும் தமிழசை செளந்திரராஜன் இந்த ஆபாச கூட்டத்திற்குப் பொறுபேற்ற பின் இந்த முயற்சி உக்கிரத்துடன் நடந்து வருகின்றது.

பி.ஜே.பியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவராக இருந்த முத்து என்கின்ற மாரிமுத்து தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். அரசியல் செய்வதற்கு ஒரு பிணம் கிடைத்த மகிழ்ச்சியில் களம் இறங்கிய ‘தேசபக்தர்கள்’ உடனடியாக செத்துப் போனவனுக்கு மாலை போடாமல், உயிரோடு இருக்கும் அவர்களது ஆதர்ச நாயகன் மோடிக்கு செருப்பு மாலை போட்டு மரியாதை செய்துள்ளனர். புது செருப்பில் மாலைபோட்டு, பணத்தை வீணாக்கி நாட்டில் பொருளாதாரத்தை நாசம் செய்வதைவிட சாலைகளிலும், குப்பைத்தொட்டிகளிலும் கிடந்த பழைய செருப்புகளை பொறுக்கி எடுத்து வந்து, தங்களது கனவு நாயகனுக்கு செருப்பு மாலை போட்டு அழகு பார்த்துள்ளனர். அத்தோடு நிற்காமல் தேசியக் கொடியை தலைகீழாகப் பறக்கவிட்டு நாடு நாசமாய்க் போய்க் கொண்டு இருக்கின்றது என்பதை குறியீட்டு உத்தி மூலம் காட்டியுள்ளனர். பின்பு TPR12345 என்று எழுதி அதில் 3 என்ற எண்ணை மட்டும் அடித்துள்ளனர். இதன் மூலம் இந்தச் சமூகத்துக்கு ஏதோ கருத்து சொல்ல வந்துள்ளனர். ஆனால் அது என்ன கருத்து என்று நமக்குத் தெரியவில்லை. ஒரு வேலை கொலைகாரர்களுக்கு மட்டுமே தெரிந்த சங்கேத மொழியாக இருக்கலாம்.

ஏற்கெனவே கோத்ரா ரயிலில் எரிந்துபோன பிணத்தை வைத்து அரசியல் செய்து, அதன் மூலம் ஆட்சியே பிடித்த வல்லவர்களான காவி தேசியவாதிகள், பத்துபைசாவிற்குக் கூட பிரயோசனம் இல்லாமல் தூக்குமாட்டி செத்துப் போன முத்துவின் உடலை வைத்து ஒரு கொலை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். கடைசியில் வழக்கம் போல முத்துவும் கசமுசா விஷயத்தில் தன் கதையை முடித்துக் கொண்டது அம்பலமாக அவமானப்பட்டிருக்கின்றார்கள். முத்துவின் மரணத்திற்கான காரணத்தை விரைந்து வெளிக்கொண்டுவந்த காவல்துறைக்கு நாம் நிச்சயம் நன்றி சொல்லியாக வேண்டும். இல்லை என்றால் திருப்பூரிலே ஒரு பெரும் கலவரத்தையே நிகழ்த்தியிருப்பார்கள் இந்த அயோக்கியர்கள். செத்த பிணத்தின் சூடு இறங்குவதற்குள் எச்சிக்கலை ராஜா, பொன்னார், இந்தக் கொலைகார கூட்டத்தின் தமிழகத் தலைவி தமிழசை போன்றோர் இதைக் கொலை என்று பிரகடனப்படுத்தி இருக்கின்றார்கள். இனி வருங்காலங்களில் இவர்களே யாரையாவது கொலை செய்துவிட்டு, அதை முஸ்லிம்கள் தான் செய்துவிட்டார்கள் என்று சொல்லி கலவரம் செய்வதற்கு முற்படுவார்கள். எனவே தமிழக அரசு பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த ஒவ்வொருவனுக்கும் எத்தனை பொண்டாட்டி, எத்தனை வைப்பாட்டி, இன்னும் கள்ளக்காதல் செய்பவன், அடுத்தவன் பொண்டாட்டியுடன் தொடர்பு வைத்திருப்பவன் ஆகியவற்றைக் கணக்கெடுத்து, அதை அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் எவனாவது பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி கட்சியில் கொல்லப்பட்டலோ, இல்லை சுயமாகவே முடிவெடுத்து தூக்குமாட்டி செத்தாலும், மிக எளிமையாக உண்மையை வெளிக்கொண்டு வந்துவிடலாம். அதுமட்டும் இல்லாமல், HIV மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களில் இருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்கவும் இது உதவலாம்.

பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகளில் இருப்பவர்களால் தமிழ்நாட்டு மக்கள் பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கின்றார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மோடியை அவமதித்துவிட்டார்கள், தேசியக் கொடியை அவமதித்துவிட்டார்கள், அவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் என்று சொன்ன இந்த மானங்கெட்ட ஜென்மங்கள், மோடியின் படத்துக்கு செருப்புமாலை போட்டு, தேசியக் கொடியை தலைகீழாக பறக்க விட்டுள்ளனர். இவன் செய்தால் அது தேசபக்தி, மற்றவர்கள் செய்தால் அது தேசவிரோதம். எனவே தமிழ்நாட்டு மக்கள் இனி பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்றவர்களின் வழிகாட்டுதல்படி மோடிக்கு செருப்புமாலை போட்டு, தங்களை தேசபக்தர்களாக காட்டிக் கொள்ள வேண்டும். மேலும் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி கழிசடைகளுடன் யாரும் எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும், அப்படி வைத்துக் கொண்டால் உங்களை அவர்கள் புள்ளிராஜாக்களாக மாற்றிவிடுவார்கள்; அப்படி இல்லை என்றால், உங்களை கட்சியின் வளர்ச்சிக்காக நரபலி கொடுத்து விடுவார்கள் என்றும் எச்சரிக்கின்றோம்.

- செ.கார்கி

Pin It