கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று, தமிழ் தெலுங்கு செய்தி ஊடகங்கள் திருப்பதி வனத்துக்குள் நுழையும் தமிழக கூலித் தொழிலாளர்களை சுட்டுத் தள்ளுவதற்கான பரபரப்பான என்கவுண்டர் அறிவிப்புகளை வெளியிட்டன. திருப்பதி வனத்துறை அதிகாரி சீனிவாசலு தெரிவித்தது என்னவெனில், “சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள செம்மரக்கட்டைகளை வெட்டிக் கடத்த தமிழ்நாட்டிலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சாலை-ரயில் மார்க்கமாக வருகின்றனர். காட்பாடி, திருத்தணி, குப்பம், குண்டக்கல் வழியாக திருப்பதி வனத்திற்குள் ஊடுருவுகின்றனர். சேஷாசலம் வனத்திற்குள் நுழையும் தமிழகக் கூலிகளை கண்டதும் சுட உத்தரவு தரவுள்ளோம். இதற்காகவே, சேஷாசலம் வனத்திற்குள் நுழையும் 70 மார்க்கங்களிலும் கண்காணிப்பு கேமிராக்களைப் பொருத்தவுள்ளோம்”. இந்த அறிவிப்பைத் தமிழகத்தில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் தனிநபரும் ஏன் என்று கூட கேள்வி எழுப்பவில்லை.
திருப்பதியில் தொலைந்து போகும் தமிழர்கள்
ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் திருப்பதியில் சேஷாசலம் வனப்பகுதியில் என்கவுண்டர். கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை பகுதியில் செம்மரக்கட்டை கும்பலுக்கும் போலீசுக்கும் மோதல். அடையாளம் தெரியாத தமிழக தொழிலாளர் பலி. கடப்பா மாவட்டம் ஓகுலவாரி பள்ளி மண்டலம் காதேலு வனப்பகுதியில் மோதல்; இரண்டு தமிழக தொழிலாளர்கள் பலி, யார் என்ற விவரம் தெரியவில்லை- என்ற செய்திகளை ஊடகங்கள் தெரிவித்தன. அன்றைய ஜெயா அரசாங்கத்தின் கவனத்திற்கு வராத தமிழக எதிர்க்கட்சிகளின் கரிசனத்திற்கு உள்ளாகாத இந்த தமிழக தொழிலாளர்கள் யார்?
ஜூன் மாதத்திலும் போலி மோதலில் கொல்லப்பட்டதாக பலரைப் பற்றிய படங்களும், செய்திகளும் வெளியாயின. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதி தானியார் கிராமம் எஸ்.சிவா, எஸ்.விஜயகாந்த், எஸ்.வெங்கடேசன் கொல்லப்பட்ட செய்திதான் செம்மரக் கட்டை வெட்டும் பணியில் தமிழகத் தொழிலாளர்கள் ஈடுபட்டு, ஆயிரக் கணக்கில் ஆந்திராவின் சிறைகளில் சிக்கித் தவிப்பதை வெளியுலகிற்கு கொண்டுவந்தது. ஜூலை 1 ல், திருப்பதி என்டிஆர் விளையாட்டு மைதானத்தில் கடப்பா, நெல்லூர் மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 346 தமிழக தொழிலாளர்களை, சீமாந்திரா போலீசார் நீதிபதியின் முன்பு ஆஜர் படுத்தினர். இவர்கள் அனைவரும் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். (அதாவது, திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில், 2013 டிசம்பர் 15ல் செம்மரக் கடத்தல் மாஃபியாக்களால் வனத்துறை அதிகாரிகள் டேவிட், ஸ்ரீதர் கொல்லப்பட்டனர்; 16 பேர் காயமுற்றனர். அதைத் தொடர்ந்து ஆந்திரா போலீசார் 3 நாட்கள் சோதனைகளை நடத்தி ரெயில் நிலையங்களிலும், பஸ் நிலையங்களிலுமிருந்த தொழிலாளர்களை கைது செய்தனர். அவ்வழக்கில் 346 பேரும் இணைக்கப்பட்டனர்.) அதற்குப் பிறகும் கூட, ஜூன் 1ல் ரேணிகுண்டாவில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கைது செய்தனர். கைதுகள் ஒருபுறமிக்க, திருப்பதி வனப் பகுதியில் போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டவர் பற்றிய தகவல்களும் வெளி உலகிற்கு தெரியாமல் சடலங்களை அவரவருடைய சொந்த ஊரில்/ மலைப்பகுயில் அடக்கம் செய்யும் செய்திகளும் தொடர் கதையாகி வருகின்றன.
கொள்ளையர்கள் யார்?
சந்தன மரம் போலவே செம்மரமும் (ஆங்கிலத்தில் ரெட் சேன்டர்ஸ், தெலுங்கில் எர்ர சந்தனம்) விலை மதிப்புமிக்க அரிய வகை மரமாகும். இசைக் கருவிகள், கைவினைப் பொருட்கள், மரச்சாமான்கள் செய்வதற்கு இது பயன்படுகிறது. மேலும் செம்மரம் அரிய மருத்துவ பண்புகளையும் கொண்டதாகும். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அணு உலைகளில் குளிரூட்டியாக பயன்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் இதன் மதிப்பு டன் ரூ.15 இலட்சம் முதல் ரூ.20 இலட்சம் வரை ஆகும். தெற்கு ஆசிய நாடுகளில் டன் ரூ.60 இலட்சம் வரை விற்பனை ஆகிறது. சீனத்திலோ, ரூ.10 கோடி வரை மதிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் செம்மரத்தின் ஆண்டுத் தேவை 3000 டன் ஆகும். தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளில் செம்மரங்கள் வளர்ந்த போதிலும், சீமாந்திராவின் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் உள்ள உயரம் குறைந்த சேஷாசலம் மற்றும் பாலகொண்டா மலைப்பகுதிகளில்தான், உலகிலேயே மிக அதிகமாக விளைகின்றன. அரிய தாவரங்களின் சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தின் (Convention on International Trade in endangered Species of wild fauna and flora-CITES) அடிப்படையில், செம்மரங்கள் தக்காண பீடபூமியின் அரிய தாவரம் என பட்டியலிடப்பட்டதால், அதை வெட்டுவது குற்றமாகும். எனவே, ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. எனவேதான் பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக, செம்மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்யும் கடத்தல் தொழில், ஆந்திராவின் அரசியல் செல்வாக்குமிக்க புள்ளிகள் மாஃபியாக்கள் ஆதரவுடன் கொடிகட்டிப் பறந்தது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கிரண்ரெட்டியின் தம்பி கிஷோர் ரெட்டி புங்கனூர் எம்எல்ஏ புட்டிரெட்டி ராமகிருஷ்ணாரெட்டி, கெங்கிரெட்டி வரை செம்மரக் கட்டை கொள்ளையர்களின் வலைப்பின்னல் பரந்து விரிந்ததாகும்.
2010லிருந்து திருப்பதியில் பதிவு செய்யப்பட்ட செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை 1472 ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட மரங்கள் 1535 டன்கள், கைப்பற்றப்பட்ட வண்டிகள் 940, கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3893 எனவும் ஆந்திர அரசாங்கம் தெரிவிக்கிறது.
ஜூன் 25ந்தேதி விசாகப்பட்டினம் தனியார் கண்டெய்னர் முனையத்தில் ஹாங்கிற்கு செல்வதற்கான ரூ.12 கோடி மதிப்புள்ள 26 டன்கள் செம்மரக்கட்டை கண்டெய்னர் போலியான கிரானைட் பில்களுடன் பிடிபட்டது. சித்தூரிலிருந்து 830 கி.மீ. தொலைவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு, தடைபடாமல் எப்படி செல்ல முடிந்தது? எத்தனை முறைகள், எவ்வளவு நாட்களாக இக்கடத்தல்கள் நடைபெறுகின்றன? அரசியல் புள்ளிகள், அதிகார வர்க்கத்தினர், காவற் துறையினர் உதவியில்லாமல் மாஃபியாக்கள் செம்மரக் கட்டைகளை வெட்டி எப்படி கடத்த முடியும்?
2010க்கும் பிறகுதான், ஆந்திர மாநில அரசானது சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மூலமாக சைட்ஸ் சர்வதேச அமைப்பிற்கு செம்மரம் வெட்ட அனுமதி கோரி விண்ணப்பித்தது. செம்மரங்கள் அரிய வகை தாவரமல்ல என்றும் முதிர்ந்த மரங்களை வெட்டுவதற்கும், ஓரு முறை ஏற்றுமதிக்கு அனுமதியும் கோரியது. பறிமுதல் செய்யப்பட்டு கிடங்குகளில் குவிக்கப்பட்டிருந்த செம்மரங்களை ஏற்றுமதி செய்திட, மத்திய வர்த்தக அமைச்சரகம் 2013 அக்டோபரில் அனுமதி அளித்தது. முதற்கட்டமாக அக்டோபர் 10-17ல், 4160 டன்களை ஏலம் விட ஆந்திர அரசாங்கம் திட்டமிட்டது. வியாபார விசாரணைக்காக வெளிநாடுகள் சென்ற அதிகாரிகள் சீனாவில் நல்ல வரவேற்பிருந்ததாகத் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, இந்த விற்பனைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT- Southern Zone, Chennai) இடைக்காலத் தடை விதித்தது.
இந்தத் தடையை அக்டோபர் 1ல் ஹைதராபாத் உயர்நீதிமன்றம் விலக்கியது. செம்மரக்கட்டை சர்வதேச ஏலத்தின் அடிப்படையில் 4160 டன் சீனாவிற்கு விற்பனையானால், குறைந்தபட்சம் ரூபாய் 5 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும். எனவேதான், சீமாந்திரா அரசாங்கம் செம்மரக் கட்டை விவகாரத்தில் தீவிரமாக இருக்கிறது. கோடி கோடியாக வருமானம் இருப்பதால்தான் ஆந்திராவின் கடத்தல் மாஃபியக்கள் மும்முரமாக இருக்கின்றனர். ஆனால், சந்திரபாபு நாயுடு அரசாங்கமோ அப்பாவித் தமிழக கூலித் தொழிலாளர்களை பலிகடாக்கள் ஆக்குவதன் மூலம் மொத்தப் பிரச்சனையையும் திசை திருப்புகிறது; கொள்ளையர்களைப் பாதுகாக்கிறது.
வாழ்க்கையை இழக்கும் பழங்குடி இளைஞர்கள்
ஆந்திராவின் சிறைகளில் வாடுகிற 5000க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களைச் சார்ந்த ஜவ்வாது மலை, ஏலகிரிமலை, சித்தேரிமலை, சேர்வராயன் மலை, அருநூத்துமலை, கல்ராயன் மலை ஆகியவற்றைச் சேர்ந்த பழங்குடி இளைஞராவர். தமிழக பழங்குடிகள் பல்லாண்டுகளாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிட்டிஷார் வந்த பின் ரயில்வே உருவாக்கப்பட்டது, பின்னர் நகர்ப்புறங்களின் வளர்ச்சியினால் கட்டுமானங்கள் முதல் கட்டிடங்கள் வரை மரங்களின் தேவை பெரிதாக அதிகரித்தது. மத்திய மாநில அரசாங்கங்களும், வனச் சட்டங்கள், வனத்துறை அமைச்சகத்தின் அனுமதிக்குட்பட்டு, சிலவகை மரங்களை வெட்ட அனுமதித்தன. மரம் வெட்டும் வேலையும் சட்டபூர்வமான தொழிலானது. மலைகளில் மரம் வெட்டுதல், அவற்றை சுமந்து வண்டிகளில் ஏற்றுதல், குறிப்பிட்டதொரு உடற் கட்டமைப்பை, உடல் ஆற்றலைக் கோருகின்றன. மலைப்பகுதிகளில் உணவே கிடைக்கவில்லை எனினும் கூட கடினமான வேலைகளைச் செய்வதற்கு பழக்கப்பட்டவர்கள் தமிழக பழங்குடி இளைஞர்கள் ஆவர்.
தமிழக மலைப் பகுதிகளில் இருந்த பழங்குடியினர் நிலங்கள், அரசியல்வாதிகளால், தொழிலதிபர்களால், நில வியாபார மோசடிப் பேர்வழிகளால் அபகரிக்கப்பட்டுவிட்டதால் கணிசமானோர் நிலங்களை இழந்து கூலிகளாக்கப்பட்டு விட்டனர். மரம் வெட்டும் வேலை பிழைப்பதற்குக் கை கொடுத்தது. மலைகளில் தோட்டங்கள் இருந்தால், அதில் வேலை கிடைத்தது; இல்லையெனில் வேலைத் தேடி அருகாமை நகரங்களுக்கு கட்டுமான வேலைகளுக்கு தினசரி செல்லத் துவங்கினர். தமிழகத்தின் மலைப் பகுதிகளில் எஸ்டேட்டுகளில், விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் மரங்கள் (மனிதன் உருவாக்கிய காடுகள்) வெட்டப்படுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அவ்வப்பொழுது அனுமதியளிக்கப்படுகிறது. பல மலைப் பகுதிகளிலும் மரம் வெட்ட அனுமதி இல்லாததால், பழங்குடி இளைஞர்கள் வேலைத் தேடி கேரளா மற்றும் கர்நாடகத்திற்கு மரம் வெட்டுதல், தோட்ட வேலைகள் என செல்லத் துவங்கினர். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சம்பாதித்த பணத்துடன் வீடு திரும்புகின்றனர். பிழைப்பிற்காக இடம் பெயர்வது என்பது தமிழக பழங்குடி இளைஞர்கள் மத்தியில் பொதுவான போக்காக மாறி வருகின்றது. பழங்குடியினப் பெண்கள்/ சிறுமிகள் நூற்பாலைகளில் சுமங்கலித் திட்ட சுரண்டலிலும், பருத்தி தோட்டங்களில் கொத்தடிமை தனத்திலும் சிக்கித் தவிக்கின்றனர். அழைக்கப்படும் வேலைக்கு செல்பவர்களாக பழங்குடியினர் மாறுகின்றனர். மொழி தெரியாத மாநிலத்தில், ஆந்திராவின் சேஷாசலம் மற்றும் பால கொண்டா மலைப்பகுதிகளில் பிழைப்பிற்காகச் சென்று வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஜமுனாமரத்தூர்- ஜவ்வாது மலை செல்வோம்…
இகக(மாலெ) மற்றும் பழங்குடி சங்கத் தலைவர்களைக் கொண்ட உண்மையறியும் குழுவானது தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை-ஜமுனாமரத்தூர் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தது; சிறைகளில் உள்ளவர்களின் நெருங்கிய உறவினர்கள், அரசாங்க அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரைச் சந்தித்து பல்வேறு விவரங்களைத் திரட்டியது. திருப்பதி சேஷாசலம் காடுகளில் ஜூன் மாதத்தில் கொல்லப்பட்ட மூவரும், மீண்டும் கைது செய்யப்பட்ட பலரும் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இம் மலைப்பகுதியில் 90,000 பேரில் பெரும்பான்மையினர் மலையாளி-பழங்குடி வகுப்பினராவர். இப்பகுதியின் 11 ஊராட்சிகளும் பழங்குடி/எஸ்டி ஊராட்சிகளே ஆகும். இப்பகுதியிலிருந்து 5000 பழங்குடி இளைஞர்கள் வெளிமாநில வேலைகளுக்குச் சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது; கடந்த 5 ஆண்டுகளில் ஆந்திராவின் காடுகளில் தொலைந்து போனவர்கள் ஏராளம். அடுத்தடுத்த தேர்தல்களின் வாக்காளர் பட்டியல்களை ஒப்பிட்டுப் பார்த்த பொழுது, பல ஆயிரம் பழங்குடி வாக்காளர்கள் குறைவதும் அபாயகரமான நிலைமையை சுட்டிகாட்டுகிறது. திருப்பதி காடுகளுக்கு மரம் வெட்டும் வேலைக்கு பழங்குடி இளைஞர்களை அனுப்பும் முகவராக அஇஅதிமுகவைச் சேர்ந்த துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் செயல்படுகிறார்; குறுகிய காலத்தில் அவர் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார். வீரப்பனூர் (4பேர்), குறியானூர்(7பேர்), அரசவள்ளி(4பேர்), புதுப்பட்டு (7பேர்), நெமியாம்பட்டு (2 பேர்), விளாங்குப்பம் (4பேர்) என பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பங்களைச் சேர்ந்தோர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தனர். கைதான இளைஞர்களின் குடும்பத்தினர் ரேசன் கார்டுகளை, அடையாள அட்டைகளை ஆந்திர வழக்கறிஞர்களிடம் கொடுத்துவிட்டு, கையிலிருந்த பணத்தை எல்லாம் ஜாமீன் எடுப்பதற்கு தந்துவிட்டு, சாப்பாட்டிற்கு வழியில்லாமல் வாடிக் கொண்டு இருக்கின்றனர்.
ஒரு முறை காட்டிற்குள் சென்று மரம் வெட்டி கட்டைகளைச் சுமந்து, வெளியே வந்து வண்டிகளில் ஏற்றுவதற்கு 3 நாட்கள் வரை ஆகிறது. கிலோ 1க்கு ரூ.100 முதல் ரூ.300 வரை கூலி என்றடிப்படையில் 30 கிலோ வரை சுமந்து வரும் தொழிலாளிக்கு ரூ.3000 முதல் ரூ.9000 வரை தருகின்றனர். கூலியின் ஒரு பகுதி உடனே தரப்படும் என்றும், மீதிப் பகுதி முகவர்கள் மூலமாக வீட்டிற்கு வந்து சேரும். ஆனால், கணிசமானத் தொகை முகவர்களிடம் சிக்கிக் கொள்ளும் என்று தெரிவிக்கின்றனர். முகவர்களில் பெரும்பான்மையோர் அதிமுகவைச் சேர்ந்தவர்களாவர். சில ஊடகங்கள் தெரிவிப்பது கூட இவர்கள் யாரும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதில்லை. ஜமுனா மரத்தூர் வட்டாரத்தில் 5000 மோட்டார் சைக்கிள்கள் உள்ளது. டாஸ்மாக் கடையின் திங்கட் கிழமை விற்பனை மட்டும் ரூ.4 லட்சம், பிற நாட்களில் தினசரி விற்பனை ரூ.2.50 லட்சம் ஆகும். ஆந்திராவின் போலீசார் அடிக்கடி இப் பகுதிக்கு வந்து விசாரணை செய்கின்றனர். இளைஞர்களைப் பிடித்துச் செல்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த கலசப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவும், அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசாங்கம் எவற்றையும் கண்டுகொள்ளவில்லை.
பழங்குடியினரை வஞ்சிக்கும் மோடி-லேடி அரசாங்கங்கள்
தமிழகத்தின் பல மலைக் கிராமங்களிலும், கொல்லப்பட்ட/தொலைந்துபோன பழங்குடி இளைஞர்கள் பற்றிய செய்திகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் கடந்த காலத்தில் அதிமுகவினர் ஆளும் கட்சியினராக இருந்த போது சந்தன மரங்கள் வெட்டி கொள்ளையடிக்கப்பட்ட பின்னணியில்தான், வாச்சாத்தியில் 400க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மீதான தாக்குதல், 18 பழங்குடி பெண்கள் மீது பாலியல் தாக்குதல், வீரப்பன் வேட்டை என்ற பெயரில் சித்திரவதை முகாம்கள் போன்றவை தோன்றின. அன்றைக்கும் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் கூலிக்காரர்களாக மரம் வெட்டப் போன அப்பாவி பழங்குடி ஏழைகள்தான். இன்றைக்கும் அதிமுகவினர் கொள்ளையர்களாக அல்லது முகவர்களாக இருக்க மரம் வெட்டபோய் அழிந்து கொண்டிருப்பவர்கள் அப்பாவி ஏழைப் பழங்குடியினர்தான்.
பழங்குடியினர் நிலம் அபகரிக்கப்படுதல், வேலையின்மையால் இடம் பெயருதல், வெளி மாநிலங்களில் சிக்கி சீரழிதல் என்ற மிகப் பெரிய சமூகப் பிரச்சனை பற்றி அஇஅதிமுக அரசாங்கத்திற்கு சிறிதும் அக்கறை இல்லை. பழங்குடியினர் நிலங்களை மீட்டுத் தருவதற்கோ, மலைப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கோ, பழங்குடியினர் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கோ திட்டங்களும் நடவடிக்கைகளும் இல்லை. சிறப்பு உட்கூறு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தவும் இல்லை. தமிழகத்தில் பழங்குடியினருக்கான 1 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில், பல்வேறு துறைகளில் வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளைக் கூட பூர்த்தி செய்வதற்கு படித்த தகுதியானவர்கள் இல்லாததால் பல ஆண்டுகளாக நீடிக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவும் இல்லை. தமிழக பழங்குடியினர் அஇஅதிமுகவின் சமூக அடித்தளமாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள இரண்டு பழங்குடி எம்எல்ஏக்களும் கூட அஇஅதிமுகவின் பக்கம்தான் உள்ளனர். ஆனால், அஇஅதிமுக அரசாங்கம் ஆந்திராவில் சிறையிலடைக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்ற குரலைக் கூட எழுப்பவில்லை; ஆந்திராவின் செம்மரக் கட்டை கடத்தல் கொள்ளையர்களை (அரசியல் புள்ளிகள், அதிகார வர்க்கத்தினர், காவல்துறையினர், வனத்துறையினர் கூட்டணியை) கைது செய்ய வேண்டும், அப்பாவி தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுக்கவில்லை. மாறாக, 1992 வாச்சாத்தி வழக்கில் 2011ல் பெறப்பட்ட தீர்ப்பில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய இழப்பீடு ரூ 1.47 கோடியைக் கேட்டுப் போராடிய வாச்சாத்திப் பழங்குடியினர் 200 பேர் மீது 2014 செப்டம்பர் 9ல் பொய் வழக்குகளை போட்டது, ஜெயா அரசாங்கம்.
தமிழக பழங்குடி தொழிலாளர்கள் ஆந்திர வனப்பகுயில் சாவது பற்றியோ ஆந்திராவின் சிறைகளில் வாடுவது பற்றியோ மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கத்தின் பழங்குடியினர் விவகாரத்திற்கான அமைச்சரகமும் கண்டுகொள்ளவே இல்லை. இந்த பிரச்சனை பற்றி பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்திடம் பல்வேறு அமைப்புகள் முறையிட்டபோது எதுவுமே தெரியாது என கூருணர்ச்சி இல்லாமல் பதிலளித்தது. தமிழக பழங்குடியினர் அவர்களது நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கூலித் தொழிலாளர்களாக மாறியவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களை மோடி, அஇஅதிமுக அரசாங்கங்கள் கை கழுவிவிட்டன. தமிழக அரசியல் கட்சிகள், தமிழ்தேசிய வாதிகள் புறக்கணித்துவிட்டனர். தமிழக பழங்குடியினர் வாழ்வுரிமைக்காக வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதற்காக, புரட்சிகர இடதுசாரி அமைப்புகள் மற்றும் பழங்குடி/தலித் அமைப்புகள் ஒன்றுபட்டு நின்று பணியாற்றிட வேண்டும்.
- சந்திரமோகன்
அதிகாரிகள், சில சங்கங்களை சார்ந்த நண்பர்கள் கொடுத்த தகவல்களை ஆய்வு செய்யாமல் அப்படியே பதிவிட்டுள்ளீர் கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் 1992ம் ஆண்டு துவக்கப்பட்டது முதல் அனைத்து பட்டியல் பழங்குடியினரின் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக பட்டியல்
பழங்குடியினர் 36 பிரிவினரும் இச்சங்கங்கத்தில ் உறுப்பினராக உள்ளனர் என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.
பழங்குடியினருக் கு இனச்சான்றிதழ் கோரி வலுமிக்க பல போராட்டங்களை நடத்தி பல்லாயிரக்கணக்க ான பழங்குடியினருக் கு சான்றிதழ் பெற்றுத்தந்தது இச்சங்கம். இந்தப் போராட்டம் தொடரும்.
அதே நேரத்தில், உண்மையில் பழங்குடியினராக இருந்தும் அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியம், அக்கறையற்ற தன்மை காரணமாக பல்வேறு பட்டியல்களில் வைக்கப்பட்டுள்ள பழங்குடியினத்தவ ரை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்கான போராட்டத்தை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசால் பல்வேறு பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்தப் பரிந்துரைகள் அனைத்துமே தமிழ்நாடு பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் மூலம் சம்பந்தபட்ட மக்களின் வாழ்வியல் நிலை குறித்து ஆய்வு செய்து, மானிடவியல் அறிஞர்களின் கருத்துக்களை ஏற்று அனுப்பப்பட்டுள்ளது.
நரிக்குறவர் பிரிவு மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் தற்போது உள்ளனர். இன்றைக்கும் நாடோடியாக, உற்பத்தியில் ஈடுபடாத சமூக இருப்பவர்கள் இவர்களை பழங்குடி பட்யடிலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மலையாளி ஏற்கனவே பட்டியலில் இருந்தாலும் ஈரோடு மாவட்டம் தனியாக பிரிந்த பிறகு, ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் மலையாளி இன மக்களுக்கு பழங்குடி சான்றிதழ் இப்போது வரை வழங்கப்படவில்லை . ஏரியா வரையறையை எடுக்க வேண்டும். அல்லது ஈரோடு என்று சேர்க்க வேண்டும். ஏரியா வரையறையை எடுப்பது என்று தற்போது மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளது.
குறுமன்ஸ் தமிழக பழங்குடி பட்டியலில் வரிசை எண் 18ல் உள்ளது. இவர்களுக்கும் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் என்று குறிப்பிட்டுள்ள குறும்பாஸ் (வரிசை எண் 17) வேறுவேறானவர்கள் . குறுமன்ஸ் - குறும்பாஸ் ஒன்றல்ல என்பதற்கு பல்வேறு மானிடவியலாளர்கள ின் அறிக்கைகள் உள்ளன. குறுமன்ஸ் சமவெளிப் பகுதியில் வாழ்பவர்கள். குறும்பாஸ் மலையில் வசிப்பவர்கள். காட்டை சார்ந்து வாழ்பவர்கள். குறுமன்ஸ் ஆடு மேய்ப்பது, கம்பளி நெய்வது பாரம்பரியமான தொழில்.
குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவான குறுமன், குறும்பா, குறும்பர் ஆகியோரும் பழங்குடியினர் தான். அவர்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டுமென்பது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோரிக்கை. இதை ஏற்றுத்தான், பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்து மேற்படி உட்பிரிவினரை பழங்குடி பட்டியலில் சேர்க்கலாம் என்ற பரிந்துரையை ஏற்று 2006ல் மத்திய அரசுக்கு அனுப்பியது. அதன் மீது இந்திய பதிவாளர்துறை கேட்ட சந்தேகங்களுக்கு 2007ம் ஆண்டு தமிழக அரசு பதில் அனுப்பியுள்ளது.
இதற்கும் மேலாக 2013ம் ஆண்டு தமிழக அரசு 7 பேர் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்து குறும்பாஸ், குறுமன்ஸ் இரண்டு பிரிவுகள் சம்பந்தமாகவும் ஆய்வு செய்து, குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவான குறுமா, குறும்பா, குறும்பர், குறும்பன், குறும்ப கவுண்டர், ஆகிய அனைத்து பிரிவினரும் பழங்குடியினர் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது.
பழங்குடியினராக இருந்தும் பட்டியலில் சேர்க்காமல் கிடப்பில் போட்டிருக்கும் மத்திய அரசுக்கு எதிராக இயல்பாக கோபம் வந்திருக்க வேண்டும். சின்னஞ்சிறு காரணங்களை கூறி இந்திய பதிவாளர் தன்னிச்சையாக இத்தகைய கோரிக்கைகளை நிராகரிப்பதை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஏற்கவில்லை. இத்தகைய கோரிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்க தனியாக தேசீய அளவில் ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டுமென்று நாங்கள் கோருகிறோம்.
பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எந்தவித ஆய்வுமில்லாமல் கண்ணை மூடிக்கொண்டு நாங்கள் ஏற்பதில்லை. உதாரணத்திற்கு திருவாரூர் மாவட்டத்தில் ஒரு பிரிவினர் தங்களை ஆதியன் என்றும் சான்றிதழ் பெற்றுத்தர வேண்டுமென்றும் கோரினர். அந்த மக்களை மன்னார்குடி கோட்டாட்சியரிடம ் அழைத்து சென்றேன். அதிகாரியால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. உடனே நான் பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக்கு பரிந்துரை செய்யுங்கள். நான் செயலாளரோடு பேசுகிறேன் என்று அன்று முடித்தோம். பிறகு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட து. அப்போது இயக்குநராக இருந்த திரு. டாக்டர் ஜக்கா பார்த்தசாரதி அவர்கள், அம்மக்கள் ஜோகிஸ் என்ற பிற்படுத்தப்பட் ட பிரிவை சார்ந்தவர்கள் என்று அறிக்கை கொடுத்தார். அதை அம்மக்களுக்கு தெரிவித்து விட்டோம்.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கையை நாங்கள் ஏற்கவில்லை.
புலையன் இன மக்கள், குறவன் இனத்தின் உட்பிரிவினரை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று கோரி, போராடினோம். பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக்கு உட்படுத்தி பழங்குடி பட்டியலில் சேர்க்கலாம் என்று டி.ஆர்.சி பரிந்துரை செய்துள்ளது.
எனவே, ஏற்கனவே பட்டியலில் உள்ள பிரிவினர்களுக்க ு சான்றிதழ் கோரி நடைபெறும் போராட்டமும், பட்டியலில் சேர்கக வேண்டுமென்று கோரி நடைபெறும் போராட்டமும் தனித்தனியானது.
கொண்டாரெட்டி (வரிசை எண் 12) பழங்குடி பட்டியலில் உள்ளனர். பள்ளிபட்டு, திருத்தணி தாலுகாவில் உள்ள கொண்டாரெட்டிகளு க்கு மட்டுமே நாங்கள் சான்றிதழ் கோருகிறோம் தமிழ்நாடு முழுவதும் அல்ல.
குறவன் இன மக்களுக்கு எஸ்.சி சான்றிதழ் கோரித்தான் போராடிக் கொண்டிருக்கிறோம ். பட்டியலில் சேர்த்தல் என்பது வேறு என்ற புரிதலுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம ்.
போலி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ள ன என்பதில் இருவேறு கருத்துக்களுக்க ு இடமில்லை. வழங்கியதுயார். வருவாய்துறை அதிகாரிகள் தானே. போலி என்பது நிரூபிக்கப்பட்ட ால் நடவடிக்கை எடுக்க எந்த தடையுமில்லை. இதைக்கூறி உண்மையான பழங்குடியினருக் கு சான்றிதழ் தர மறுப்பதை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஏற்காது .
எனவே, சந்தர்ப்பவாத நிலை எடுத்து சீரழிந்து கெண்டிருக்கிறோம ் என்பதை வன்மையாக மறுக்கிறேன். பட்டியலில் சுமார் 20 போலி பழங்குடி பிரிவினர் உள்ளனர் என்பதையும் நாங்கள் ஏற்றவில்லை. 1950, 1956, 1976 என பல்வேறு காலக்கட்டங்களில ் ஆய்வுகளுக்கு பிறகு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய செயலாளர் அண்ணாமலை, நீதிமன்ற வழக்கைப் பொருத்தவரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திற்கு அதில் உடன்பாடில்லை. எந்தவொரு அதிகாரியையும் நேருக்கு நேராக எதிர்த்து போராடுவது தான் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் வரலாறு. உடன்வந்த யாரோ செய்த வேலை இது. நீதிமன்றத்திற்க ு போன பிறகு தான் விபரம் தெரியும். அண்ணாமலை சார்பாக என்னிடத்தில் பேசியவர்களிடம் எனது மிகுந்த வருத்தத்தை பதிவு செய்துள்ளேன். ஆனால், செயலாளர் அவ்வாறு தான் பேசினார் என்பதே உண்மை. அன்றைக்கு செயலாளரை பார்க்க சென்றது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை அளிப்பதற்காகவே. அதில் ஒரு கோரிக்கை பட்டியலில் உள்ள அனைத்து பழங்குடியினருக் கும் தாமதமில்லாமல் சான்றிதழ் வழங்க வேண்டுமென்பதே, அதை படித்துவிட்டுத் தான் செயலளரை தேவையில்லாமல் அத்தகைய கருத்துக்களை தெரிவித்தார். குறிப்பிட்ட வழக்கை பற்றி சென்றவர்கள் யாரும் பேசவில்லை. பட்டியலில் உள்ள ஒரு பிரிவினருக்கு சான்றிதழ் தரக் கூடாது என்று சொல்வதற்கு செயலாளருக்கு ஏது அதிகாரம். வழக்கறிஞர்களுடன ் டெல்லிபாபுவும் சேர்ந்து கொண்டு நீதிபதிகளுக்கு பணம் வாங்கிக் கொடுப்பது போல் தங்கள் எழுதியிருப்பது அயோக்கியதனமான குற்றச்சாட்டு. இதை திரும்ப பெற வேண்டும். பழங்குடி அல்லாத ஒருவருக்கு கூட பழங்குடி சான்றிதழ் வழங்கக்கூடாது என்பதில் உங்களை விட நாங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கிறோம்.
பழங்குடியினருக் கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு மத்திய - மாநில அரசுகளின் கொள்கைகள் தான் அடிப்படை காரணம் என்பதை தாங்கள் அறியாதவரல்ல. குறிப்பிட்ட அதிகாரி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர், நேர்மையானவர் என்றெல்லாம் தாங்கள் குறிப்பிட்டுள்ள ீர்கள். அவர் தனது பொறுப்பை எப்படி நிறைவேற்றுகிறார ் என்பதை பொருத்துத்தான் அவரை மதிப்பீடு செய்ய வேண்டும்.
வணக்கம்.
RSS feed for comments to this post