நான் மேடைகளில் உணர்ச்சிபொங்க பேசியதுண்டு. ஆனால் தங்களைப் போல அச்சுபிசகாமல் அர்த்தத்தோடும் நையாண்டியோடும் பேச நினைத்து முடியாமல் போனதுண்டு. அதே போல் ஈழக்கொள்கையில் மாறுபட்டிருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஒரு மதிப்பு இருந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ....
நான் செம்பியன், லயோலா கல்லூரி இரண்டாமாண்டு மாணவன். ஈழத்தில் நம் இனம் படும் துன்பங்களைக் கண்டு, தம்பி பாலச்சந்திரன் கொல்லப்பட்ட காட்சிகளைக் கண்டு தமிழக மாணவர்களை ஒன்றிணைத்துக் கொண்டு இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்றெண்ணி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கிய மாணவர்கள் எண்வரில் நானும் ஒருவன்.
உண்ணாவிரதத்தை லயோலா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தொடங்கியிருந்தாலும் இது இனத்துக்கான போராட்டம். இதில் அனைத்து தமிழக மாணவர்களும் 'தனித்தமிழீழம் ஒன்றே தீர்வு' என்ற முழக்கத்தோடு எடுத்துச் செல்லும் விதமாக பொதுவான பெயரில் 'தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு' என்று உருவாக்கினோம்.
ஆனால் எதிர்பாராவிதமாக எந்த காரணமும் இல்லாமல் 'தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு' என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி தங்களது மாணவர் படையை வைத்து தமிழக மாணவர்களிடையே முதல் பிரிவினையை ஏற்படுத்தியது. இன்றுவரை அவர்கள் ஈழத்துக்கான மாணவ போராட்டத்தில் தனி அணியை உருவாக்கிய காரணம் என்ன என்று புரியவில்லை? நிற்க.
இந்திய பார்ப்பனீயம், தங்களது மொழியில் சொல்வதானால் இந்திய ஏகாதிபத்தியம் எங்களது உண்ணாவிரதத்தை வலுக்கட்டாயமாக பல தந்திரங்களை கையாண்டு முடிவுக்கு கொண்டுவந்தது. ஆனாலும் மாணவத் தீ பரவிவிட்ட செய்தி அறிந்து, சென்னை அல்லாது பிற மாவட்டங்களில் எங்களைப்போல் உண்ணாவிரதம் இருந்து தொடர்ந்து தீயை அணையாமல் பாதுகாத்த மற்ற கல்லூரி மாணவர்களைச் சந்தித்து, ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வலுவான தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கும் பொருட்டு, தமிழக மாணவர்களை ஒன்றிணைப்பதற்காக நாங்கள் வெளிமாவட்டங்கள் சென்றிருந்தோம்.
அதுசமயம் இங்கு சென்னையில் பல கல்லூரி மாணவர்கள், கூட்டமைப்பின் சார்பாக ஒன்றாக இருந்து செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கக்கூடிய செயல். இதில் பல இயக்கங்களின் மாணவரணி செயல்பட்டது. அதில் ஒருவர்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பெருமன்றத்தைச் (AISF) சேர்ந்த சி.தினேஷ்.
செயல்பட்ட அணைத்து மாணவர்களும் தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு என்றே முழக்கமிட்டனர். கூட்டத்தோடு கூட்டமாக வந்த உங்கள் மாணவரணி பெருமன்றத்தின் தோழர் தினேஷும் தனித் தமிழீழமே தீர்வு என்று கூறுவது உண்மையிலேயே மட்டற்ற மகிழ்ச்சி.
ஏனென்றால் கடந்த மார்ச் மாத ஐ.நா. தீர்மானத்தின் போது நாடாளுமன்றத்தில் ஈழத்திற்கு எதிராக உரக்க குரல் கொடுத்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாஸ்குப்தா. தோழர் தினேஷ் சொல்வது போல் தனித்தமிழீழமே தீர்வு என்று நீங்கள் கூட கூறியதாக கேள்விப்பட்டதில்லை.
இவ்விடத்தில் நாங்கள் தங்களிடம் கேட்பது, ஒன்று தில்லியில் உங்களது முழக்கத்தை தனித்தமிழீழம் என்று முன்வையுங்கள். அப்படி செய்தால் தமிழகத்தில் அனைவரும் மகிழ்வர். ஏறக்குறைய 90 ஆண்டு அனுபவமுள்ள அரசியல் கட்சி தனித்தமிழீழ கோரிக்கையை முன்வைத்தால் மகிழ்ச்சிதானே?! இல்லையென்றால் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் பெயரை வைத்துக்கொண்டு தங்களது கட்சியின் மாணவரணி தோழர் தினேசை பயன்படுத்தாமல் இருக்க வழிவகை செய்யுங்கள்.
மார்க்சியத்தைப் புரிந்துகொண்டோமோ இல்லையோ ஆனால் தங்கள் கட்சியைப் போல போராட்ட செயல்பாடுகளை, முடிவுகளை தலைநகர் சென்னை என்பதால் ஓரிடத்திலிருந்து எடுக்காமல் எல்லாமாவட்டத்திலும் கலந்தாலோசித்து மண்டல ரீதியாக மாணவர்கள் ஒன்றிணைந்து குழு அமைத்து முடிவெடுப்பது என்று திட்டமிட்டுள்ளோம். ஆனால் தோழர் தினேசோ மொத்த தமிழ்நாட்டையும் ஒற்றையாளாக நின்று போஸ்டர்களிலும், பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டுள்ளார்.
கூட்டமைப்பு சார்பாக ஒரு போராட்டத்தை அறிவித்தால் இலட்சங்களில் செலவு செய்து போட்டியாக மாநாடு ஒன்றை அறிவிக்கிறார்! சக மாணவர்களோ, ஊடகவியலாளர்களோ எங்களிடம் வந்து மாணவர்களாகிய உங்களுக்கு ஏது இவ்வளவு பணம் என்கின்றனர். மாநாட்டிலோ கம்யூனிஸ்ட் தோழர்களின் பங்கே அதிகம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளுக்கு மாவட்டங்களில் பேரணி அறிவித்தால் போட்டியாக சுடர் பயணம் என்கிறார். மற்ற மாணவர்கள், உணர்வாளர்கள் குழப்பமடைந்து ஏன் தனித்தனியே செய்கிறீர்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.
எங்கள் கல்லூரிக் கல்வியை பணயம் வைத்து, பெற்றோர்களை பகைத்துக்கொண்டு மாபெரும் இந்திய அரசை எதிர்கொண்டு சாகும்வரை உண்ணாநிலை என்று போராட்டக்களத்திற்கு வந்த எங்களை 'இனத்துரோகி பாதிரியார்' ஒருவரின் பின்புலத்தில் இயங்குவதாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதை செய்வது களத்தில் இருக்கும் சக மாணவர்கள் என்னும்போது இந்த சமூகம் எங்களைப் போன்றவர்களுக்கு சூட்டும் பட்டத்தை கண்டு அகமகிழ்கிறோம்.
அரசியல் வாழ்வில் தூய்மையைக் கடைபிடிக்கும் நெடுமாறன், ஐயா நல்லக்கண்ணு போன்றோர்களை முன்னுதாரணமாகக் கொண்டு சுயநலமில்லா மாணவர் போராட்டத்தை வைத்து தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கிறோம். முடியாதவகையில் அடுத்த கல்வியாண்டு மாணவர்களிடம் தமிழீழ விடுதலைக்கான மாணவ போராட்டத்தை மாணவ போராட்டமாகவே கொடுத்துச் செல்ல எண்ணுகிறோம். இதில் கட்சி சாயல் பூசவேண்டாமே!
இன்று தெலுங்கானா போராட்டம் வெற்றிபெறும் நிலையில் இருப்பதற்கு அங்குள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களின் பங்கை யாராலும் மறுக்க முடியாது. வேறுவேறு கொள்கை கொண்ட பலதரப்பட்ட மாணவர்களாக அவர்கள் இருந்தாலும் தனித் தெலுங்கானா என்று வந்துவிட்டால் எல்லா மாணவர்களும் ஒன்றிணைந்து போராடுகின்றார்கள். இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள அரசியல் கட்சிகள் மாணவர்களை மாணவர்களாகவே செயல்பட வைப்பதுதான். ஆனால் சபிக்கப்பட்ட தமிழினத்திலோ எதிரிகளை விட வேகமாக துண்டாடுவது உணர்வாளர்களாகவே உள்ளனர்.
இன்னும் ஓரீரு ஆண்டுகளில் மாணவ பருவத்திலிருந்து வெளிவந்தபிறகு தங்களைப் போன்ற கட்சிகள் தங்களது சித்தாந்தங்களை, கொடிகளை எங்கள் மீது திணிக்கலாமே? அதுவரை ஈழப்போராட்டம் மட்டிலுமாவது மாணவப் போராட்டத்தை கட்சி சாயல் பூசாமல் விட்டுவையுங்களேன்?!
நாங்கள் உங்களிடமும் மற்ற அரசியல் கட்சிகளிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான். உங்களுக்கு என்று உங்களது கொள்கைகளை சுமந்து செல்ல ஓர் அரசியல் கட்சி, தொழிலாளர் அணி, மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி என பல உள்ளது. எங்களுக்கென்று இருப்பது மாணவர் கூட்டமைப்பு ஒன்றுதான். மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த தினேசை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக எந்த விதமான அறிக்கையும் கொடுத்து ஊடகவியலாளர்களையும் சக மாணவர்களையும் குழப்ப வேண்டாம் என தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக
செம்பியன் (லயோலா கல்லூரி, இரண்டாம் ஆண்டு) - 96000 94493, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வருகிறது என்று?????
திராவிட பிள்ளைகள் இல்லை ... மற்றவர்கள் எழுதிக்கொடுக்க ....
இன்னும் திராவிட கட்சிகளை நம்ப நாங்கள் தே -பிள்ளைகள் இல்லை அண்ணா ....
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
லயோலா தம்பிகளுக்கு உங்களின் உன்னதமான போராட்டத்தை மதிக்கிறேன்.அது வும் லயோலா கல்லூரி வளாகத்தில் முதல்நாள் நீங்கள் தொடங்கிய போராட்டத்தை தலைவணங்கி மதிக்கிறேன்.
அன்று மாலை உங்களின் போராட்டத்தை உண்மையான உணர்வு கொண்ட தமிழ் உள்ளங்கள் கோயம்பேட்டுக்கு மாற்றிய அதிகாலைவரை மதிக்கிறேன். ஆனால் காலையில் அய்யா வைகோ காலடி எடுத்துவைத்த அக்கணம் முதல் நீங்கள் கலங்க பட்டுவிட்டீர்கள ்.அதன்பிறகே மற்ற தலைவர்கள் வருகை கட்டாயமாகிபோனது.
தங்கபாலுவை நீங்கள் அழைத்து தரம் தாழ்ந்து போனீர்கள்.உங்கள ின் உண்மை முகம் தமிழ் உணர்வாளர்களால் உணரப்பட்டது.மேல ும் சிலருடன் கூடி வைகோவிற்கு ஆதரவான "மாணவர் கட்சி" தொடங்க நீங்கள் முற்பட்ட கணம் ,உங்களின் அயோக்கியத்தனமான அரசியல் வெளிப்பட்டுவிட்டது.
உங்களின் பழைய கல்லூரி மாணவர் இப்போராட்டத்திர ்க்காக நன்கொடையாக அளித்த பல இலட்ச ரூபாய் உங்களை மேலும் மேலும் தவற்றின் வழியையே பின்பற்ற காரணமாய் போனது.நீங்கள் மட்டுமே இம்மாணவர் போராட்டத்தின் உரிமையாளர் என்ற கேடுகெட்ட என்னத்தை எப்போது நீங்கள் சுமக்க தொடங்கினீர்களோ ,அன்றே தமிழீழ போராட்டத்தின் தடைகற்களில் நீங்களும் ஒன்றாகி போனீர்கள்.
நீங்கள் குற்றம் சாட்டும் தினேஷ் என்பவர்தான் முதன்முதலில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்க பத்திரிக்கையாளர ் மன்றத்தில் அழைப்பு விடுத்தார்.
நீங்கள் குற்றம் சாட்டும் தினேஷ் என்பவர்தான் "ஒரு கோடி மாணவர்களின் தொடர் முழக்கப்போராட்ட த்தினை " தமிழகம் தழுவிய அளவில் நடத்தி உலக தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டினார்.
நீங்கள் குற்றம் சாட்டும் தினேஷ் தான் "திருச்சி,விருத ுநகர்" உள்ளிட்ட மாவட்டங்களில் உங்களால் மதிக்கப்பட்ட ,மதிக்கப்படுகின ்ற "காங்கிரஸ்"கயவர ்களால் எம்மின மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து 'அய்யா நெடுமாறன் மற்றும் அய்யா நல்லகண்ணுவை ' வைத்து மாணவர்களால் "மாபெரும் மாநாட்டினை" திருச்சியில் நடத்தினார்.
நீங்கள் குற்றம் சாட்டும் தினேஷ் தான் வரும் ஜூன் -ஜூலை மாதத்தில் 1,45,0000-க்கு மேற்பட்ட முள்ளிவாய்க்கால ில் கொல்லப்பட்ட நம் சொந்தங்களின் நினைவாக எழுப்பப்பட்டுள் ள "முள்ளிவாய்க்கா ல் முற்ற நினைவிடத்துக்கு "தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம் " என்ற மாபெரும் இன எழுச்சி சுடர் பயணத்தை நடத்த உள்ளார்.
மேற்கண்ட அனைத்து பணியினையும் தனது அரசியல் அடையாளத்தை தூக்கி எறிந்துவிட்டு செயல்படும் ஒரு மாணவனை கொச்சைபடுத்தும் உங்களின் மேற்கண்ட கட்டுரை ,நீங்கள் சுய சிந்தனை இழந்த தன்மையை காட்டுகிறது.
இதுவரை உங்களை பற்றியோ மற்ற மாணவர் அமைப்புகளை பற்றியோ எந்தவிதமான எதிர்மறை கருத்துக்களையும ் வெளியிடாமல் ....
"மெய்வருத்தம் பாரார் ,பசிநோக்கார்,கண ்துஞ்சார்,எவ்வெ வர் தீமையும் மேற்கொள்ளார், செவ்வி அருமையும் பாரார்,அவமதிப்ப ும் கொள்ளார் ,கருமமே கண்ணாயினார் " என்ற பாடலுக்கிணங்க செயல்படும் ஒரு மாணவனை செயல்பட விடுங்கள்....." தமிழீழம்" என்பது 10 கோடி தமிழர்களின் உயிர் மூச்சு...அதுபோல ் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு" என்பதும் பாலகன் "பாலச்சந்திரனால ் " ஈன்ற குழந்தை அது 1,60,000,000 மாணவர்களுக்கு உரியது. அதனை உரிமைகொண்டாட யாருக்கும் உரிமையில்லை.
மீண்டும் நீங்கள் (லயோலா கல்லூரி மாணவர்கள்) இந்த கூட்டமைப்பு குறித்து உரிமை (உங்களது என்று) கொண்டாடுவீர்களே ன்றால் உங்களின் பின்னணி குறித்து உலக தமிழர்களுக்கு அம்பலப்படுத்தவே ண்டிய பணியை நாங்கள் சுமக்க நேரிடும்.
"மீண்டும் சொல்கிறோம் உங்களின் லயோலா உண்ணாவிரதத்தை மதிக்கிறோம்"
- செ .இளமாறன் .
2.தமிழ்நாட்டிலே வாழ்கின்ற ஒட்டுமொத்த மாணவர்களின் பிரதிநிதியாக தாங்கள் மட்டும் தான் இருக்க முடியும் அல்லது இருக்க வேண்டும் என்பது, அமெரிக்கா செய்யும் தாதா வேலைப்போல இல்லையா?
3.பெயருக்காக வேலையை மாற்றிக்கொள்ள கூடாது, வேலைக்காக எதையும் மாற்றிக்கொள்ள எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும். சரியான செயல்பாடு தான் வலுவான அமைப்பை உருவாக்கும் அல்லது நிலைநிறுத்தும்.
4.போராட்டக்குழு என்று எழுதிய நீங்கள் இன்னும் வெளிப்படையாக தமிழ்நாடு மக்கள் கட்சி என்று எழுதியிருக்கலாம்.
5.அரசியல் என்பது அருவருப்பான சொல் அல்ல, ஈழம் ஒர் மாபெரும் அரசியல். அரசியல் அமைப்புகள் இல்லாமல் தானாக அல்லது தனி மனிதனாக எதையும் போராடி வென்று விட முடியாது.
உங்களை நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் ஒரு அமைப்பில் இருந்துகொண்டு மற்றவர்களை குறை சொல்வது மிகவும் தவறு.
நான் வெளியூருக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந ்ததால் உங்களிடம் செல்போனில் பேசும்போது சரிவர கேட்காததால் வீடு திரும்பியவுடன் பேசுகிறேன் என்று சொல்லி வைத்தேன். ஆனால் நான் உங்களிடம் பேசும்போது நான் நடுங்கிப்போய்வி ட்டது போலவும் படித்துவிட்டு கூறுகின்றேன் என்றும் இங்கு பதிவிட்டுள்ளீர்கள்.
நான் பழகிய யாரிடமாவது சென்று நான் ஒருவரிடம் நடுக்கத்துடன் பேசினேன் என்று கூறுவீர்களேயானா ல் உங்களைபார்த்து கைகொட்டி சிரிப்பார்கள். பொது இடத்தில் மற்றவர்களைப் பற்றி பேசும் போது வார்த்தைகளை சரியாக பயன்படுத்தவும்.
------------------------------------------------------
@ கண்ணன், இளையராஜா
நாம் தனிஈழத்துக்கான போராட்டத்தில் எதிர்கொள்வது வெறும் சிங்கள தேசத்தை மட்டும் அல்ல. இங்கிருக்கும் தமிழின விரோத கட்சிகள், இயக்கங்கள், வலுகொண்ட இந்திய அரசு, உலக வல்லரசு நாடுகள், முதுகில் குத்தும் இனத்துரோகிகள். நம் நிலை இவ்வாறிருக்க திட்டமிட்டு துவக்கிய ஒரு மாணவர் போராட்டத்தில் ஒரு வலுவான காரணம் ஏதும் இல்லாமல் உண்ணாவிரத பந்தலில் இருந்த மாணவர்களை அழைத்து சென்று புது மாணவர் அணியை உருவாக்கியது ஏன் என்று தெரியவில்லை என்று தான் கூறினேன்.
20 இலட்சம் மாணவர்கள் கொண்ட தேசத்தில் களமிறங்கி போராட வந்த 4 இலட்சம் மாணவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்துதான் போராடவேண்டும் என்பது எங்கள் ஆசையாக இருந்தாலும் அது நடைமுறையில் மாறும் என்பது உண்மை. அதை அறியாமல் இல்லை. மாணவர்கள் எல்லாரும் சேர்ந்து உணர்வாளர்கள் எல்லோரையும் சேர்த்து பல பத்தாண்டுகளாக போராடிக்கொண்டிர ுக்கும் தலைவர்களை சேர்த்துக்கொண்ட ு தான் நம் இலக்கை அடைய முடியும்.
தனி மாணவரணி அமைத்திருந்தாலு ம் தனித்தமிழீழத்தை முன்வைத்து போராடியதால்தான் மே 17 அன்று நீங்கள் நடத்திய நினைவு கூட்டத்தில் உரையாற்றினேன்.
ஈழம் என்பது தமிழரின் உயிர்நாடி அதை ஒரு கல்லூரியை சேர்ந்த எட்டு மாணவர்களோ அல்லது ஒரு அரசியல் கட்சியின் மாணவரணியோ தனியே நின்று சாத்தியபடுதமுடி யது. நாங்கள் ஒரு போதும் லயோலா கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே இந்த போராட்டம் சொந்தமானது என்று எந்த இடத்திலும் கூறியதில்லை. வலுக்கட்டாயமாக அந்த கருத்தை எங்கள் மீது திணிப்பதால் பயனடையபோவது எதிரிகளே. இன்னும் ஒரு ஆண்டு போனால் நான் மாணவனும் இல்லை, லயோலா கல்லூரியை சார்ந்தவனுமில்லை.
மேலுள்ள கடிதம் தனித்தமிழீழம் என்றாலே தனக்கும் அதற்கும் தொர்டர்பில்லை என்பதுபோன்ற கடந்த கால வரலாற்றை கொண்டிருக்கும் கம்யூனிச கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்த ஒருவர் போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்துவதை தடுக்கத்தான்.
----------------------------------------------------------------
@ .............
இவன் மதிமுக வை சேர்ந்தவன், இவன் ஜகத் கஸ்பாரின் கைதடி, இவன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன், இவன் உளவுத்துறையை சேர்ந்தவன் என ஒருவர் கேட்கும் கேள்வியில் உள்ள நியாயத்தை விட்டுவிட்டு கேட்டவரை தனிப்பட்ட வகையில் முத்திரை குத்த நினைப்பது பார்பனீயத்தின் எச்சம்.
ஆனால் அதனை ஒருங்கிணைத்து நாங்கள் தான் வழிநடத்துவோம் என செயல்படும் மற்ற மாணவர்களை கொச்சை படுத்தும் விதமாக பொது வெளியில் கடிதம் எழுதுவது கேவலமான செயல் மட்டுமல்ல....நீ ங்கள் தொடக்கிவைத்த போராட்டத்தினையே கேள்விக்குள்ளாக்குகிறது....
உண்ணாவிரதத்தை தவிர நீங்கள் வழிநடத்தியதாக எந்த போராட்டத்தையும் நான் கேள்விப்படவில்ல ை.அப்போ அதை நடத்திய மாணவர்களை(தினேஷ ் +இளையராஜா ) கொச்சைபடுத்துவத ு ஈனச்செயல் இல்லையா மாணவர்களே?.....
அரசியல் கூடாது என கூறுபவர்கள் தங்களின் சுயநலத்துக்காக மாணவர்களை பயன்படுத்த துடிப்பதை உங்கள் சண்டை உணர்த்துவதாக உள்ளது.
நீங்கள் அறிவித்த மே 17 நினைவு தினம் முன்னிட்டு மே 18 பேரணி மற்றும் பொதுகூட்டம் பெரிய அளவில் எங்காவது திட்டமிட்டு நடத்தியதாக எந்த செய்தித்தாள்களி லும் நான் காணவில்லை.மெரின ாவில் 50 பேர் கூடியதோடு சரி (முகநூளில் கண்டேன்).
அதற்காக (மே 17 முள்ளிவாய்க்கால ் நினைவு தினம்) மே 18 அன்று தமிழகம் தழுவிய பேரணி பட்டியலை வெளியிட்டிருந்த ீர்கள்.எங்கும் நடந்ததாக முகநூளில் கூட நான் காணவில்லை.
ஆனால் "திருக்குறள்"தி லீபன் பெயரில் வங்கி எண்- பொதுத்தளத்தில் அப்போராட்டத் திற்காக நன்கொடை கேட்டு முகநூளில் போட்டிருந்தீர்க ள். அந்த போராட்டத்திற்கு எவ்வளவு தொகை நன்கொடையாக பெறப்பட்டது ?.....அதுபற்றிய விவரங்களை மற்றும் வங்கி statement -ஐ அதே பொதுவெளியில் போராட்டத்திற்கு பிறகு வெளியிடுவதுதான் உங்களின் உண்மையான போராட்டத்திற்கு அழகு.
போராடும் மாணவர்களை கட்சியை வைத்து புறக்கனிக்காதிர ்கள்...ஏனெனில் உங்களின் பின்னணியிலும் ஒரு ஒரு கட்சி உள்ளது என்பது எமைப்போன்ற பொதுவெளியில் உள்ளவர்களுக்கு தெரியும்.இப்போர ாட்டத்தில் "திராவிட இயக்கங்கள் (கொளத்தூர் மணி,கோவை.இராமகி ருஷ்ணன்),நாம் தமிழர்,ம.தி.மு. க.,சி.பி.ஐ.,தமி ழக வாழ்வுரிமை கட்சி,மே 17 இயக்கம்,சேவ் தமிழ் இயக்கம்,தமிழ்நா டு மக்கள் கட்சி,தமிழ் தேச பொதுவுடமைக் கட்சி,இளைஞர் இயக்கம்,தமிழர் எழுச்சி இயக்கம் ,உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்,இந்து மக்கள் கட்சி,மனித நேய மக்கள் கட்சி,தமிழர் தேசிய இயக்கம்,தமிழர் களம்,தமிழ் சமூகங்களின் கூட்டமைப்பு,தமி ழ் இளைஞர் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளின் முயற்சியால் தான் இப்போராட்டம் முன்னோக்கி நகர்ந்தது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?......
ஆனால் உங்களைத்தவிர யாரும் இப்போராட்டத்தை உரிமை கொண்டாட வில்லை......
உண்மையில் இப்போராட்டத்தை நடத்தியது -பாலச்சந்திரன்
உண்மையில் இப்போராட்டத்திற ்கு உரிமையானவன் -பாலச்சந்திரன்.
கடமையை செய்! பலனை எதிர்பார்க்காதே !-லயோலா சொல்லிதரவில்லையோ?...
உங்களின் உண்மையான உணர்வு மதிக்கத்தக்கது. ஆனால் அதை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள் மாணவர்களே!
அ.சக்திவேல்
ஒவ்வொருவருக்கும் நமது பக்கமுள்ள நியாயம் புரிய சில காலம் ஆகலாம்.....அதுப ோல தமிழ்,தமிழீழம் என பேசியவர்கள் எம்மினத்தை காட்டி கொடுத்தனர்...பி ரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று கூறியவர்கள் இன்று தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு கேட்கிறார்கள்.. .இதுதான் காலத்தின் சக்தி என்பது.அதுபோல் சி.பி.ஐ கட்சி 2008 ம் ஆண்டு ஈழ தமிழர்களின் ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்தது என்பது ஈழ போராட்டத்தில் இந்திய அளவில் ஒரு திருப்புமுனை... ஈழ வரலாற்றை தொடக்கமுதல் உற்று நோக்குபவர்களுக் கு சி.பி.ஐ -ன் ஆதரவின் வலிமையை உணர்வார்கள்.அந் தவகையில் நேற்று அவர்கள் ஆதரிக்காததால் இன்று மட்டும் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதுபோல தம்பி செம்பியனின் விதண்டாவாதம் அமைந்துள்ளது. அறியாமையை பொருத்துகொள்வோம ்!.நமது பிள்ளைகள் செய்யும் தவறுகளை கண்டிக்கவும்,மன ்னிக்கவும் நமக்கு உரிமை உண்டு.
--------நாளை சி.பி.எம் கட்சி கூட தனது இதுநாள் வரை தவற்றினை திருத்திக்கொண்ட ு தமிழீழத்தை ஆதரிக்க முன்வருமானால் நாம் இருகரம் கொண்டு வரவேற்க வேண்டும்.அதுதான ் தமிழினத்துக்கு நன்மை பயக்கும். வந்தவர்களை ...இனி வருபவர்களை வரவேற்க தான் நமக்கு உரிமை உண்டே தவிர ...வரகூடாது என கூற யாருக்கும் உரிமையில்லை.எம் தேசிய தலைவருக்கும் இது பொருந்தும்.
தமிழகத்தில் அய்யா நெடுமாறனை தவிர மற்றவர்களுக்கு தங்கள் தங்கள் அரசியல் இலாபமே மேற்கண்ட வாதங்களை அறியாமையால் பின்பற்ற வேண்டி இருக்கிறது.
நாளை எமக்கான விடுதலையை சிங்கள தலைவர்களிடமிருந ்துதான் நாம் பெற்றாக வேண்டும்...அதுப ோல் நாளை எம்மினத்தை அழிக்க துணைபோனவர்களும் ...அதற்க்கு துனைநின்றவர்களு ம் ..எமது நியாயத்தை உணர்ந்து தமிழீழத்தை அங்கீகரிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை...
அப்போது நீங்களெல்லாம் எம்மினத்தை அழித்தீர்கள் அதனால் நீங்கள் அங்கீகரிக்கும் தமிழீழம் எமக்கு வேண்டாம் என தம்பிகள் கூறுவீர்களா?... ...அப்படி கூறுபவர்களை பற்றி காலம் பொருட்படுத்துவத ுமில்லை....இன்ற ுவரை எமது தேச விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த எம் மாவீரர்களும் ..இலட்சோப இலட்ச மக்களும் மன்னிக்க போவதுமில்லை.
மாணவர்களின் மகத்தான போராட்டம் போற்றத்தக்கது.. .ஆனால் எடுப்பார் கைப்பிள்ளைபோல் மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதால் "அரசியல் வேண்டாம்" என நீங்கள் கூறும் அறியாமையை என்னும் போது மனம் வலிக்கிறது.
ஏனெனில் "தமிழீழம் " என்ற சொல்லை உச்சரிப்பதே அரசியல் தான்.
தம்பிகள் உணர்வீர்கள் என நம்புகிறேன்!
யார் இப்போராட்டத்தை கையில் எடுக்கவேண்டும். ..யார் எடுக்கக்கூடாது. ..என்பதை தீர்மானிக்கும் உரிமையை உங்களுக்கு யாரும் கொடுக்கவில்லை.. உங்களுக்கான (இன )கடமையை செய்யுங்கள் காலம் (கடந்த 60 ஆண்டுகால போராட்டம்..) அதற்க்கான வழியை காட்டும்.
மாணவர்கள் ஒன்றாக போராடுங்கள்...த னித்தனியாக போராடுங்கள்.... ஆனால் ஒருவரை ஒருவர் பகைமை பாராட்டிக்கொண்ட ு போராடாதிர்கள்.. .இன்னும் எத்தகைய அழிவுக்கு பிறகு இந்த இனம் தனக்கான பாடத்தை படிக்கும்....நீ ங்கள் உட்பட....!
முள்ளிவாய்க்கால் எம் போராட்டத்தின் முடிவல்ல....ஆனா ல் எம்மின உட்பகையின் முடிவாக இருக்கட்டும்... பொதுவெளியில் நீங்கள் போடும் சண்டை என்பது.."மல்லாந ்து படுத்துக்கொண்டு நம்மீதே நாம் துப்புவதுபோலாகும்.
வரும் தலைமுறையிடம் போராட்டத்தின் அடுத்தநகர்வை ஒப்படைத்த இக்கணமே ...மீண்டுமா?..ப ோதும்.ஒன்றாகவேண ்டாம்....ஒருங்க ிணைந்து போராட முனைப்பெடுங்கள் தம்பிகளே!
-அகதியான்
நான் குறிப்பிட்ட சில வார்த்தைகள் பலரையும் பல வகையில்
புண்படுத்தி இருப்பதால் வருந்துகிறேன்.. ..
எப்படி உங்களால் தங்கபாலுவை (காங்கிரஸ்),T .K .S .இளங்கோவனை (தி.மு.க.), ஜெகத் காஸ்பர் (தி.மு.க.ஆதரவாள ர் ),சுபவீ (தி.மு.க.ஆதரவாள ர் ),திருமாவளவன் (கொலைகாரியை அன்னை சோனியா என்று அழைத்து மகிழ்ந்தவர் +இராஜபக்ஷே விடம் நல்லுறவு பேணுபவர்) போன்றவர்களை உங்களின் உண்ணாவிரதத்தை வாழ்த்த அழைக்க முடிந்தது.
இராஜபக்ஷேவின் மனைவி வந்தாலும் வரவேற்ப்போம் என கூறமுடிந்தது.
உங்களுக்கு அரசியல் தெரியாதுதான் ..ஆனால் நம் எதிரி யார்?..நம் துரோகி யார் என்று கூடவா தெரியாது தம்பிகளா?...அப் படி ஒன்றுமே தெரியாதவர்கள் ஏன் தலைமைக்கு அடித்துகொள்கிரீர்கள்!
வழிநடத்தும் திறனுள்ளவர்கள் வழிநடத்தி செல்லட்டுமே ! அவர்களை ஏன் இந்த கட்சி ..அந்த கட்சி என வெறுக்கிறீர்கள் ..அப்படியென்றால ் தமிழீழத்திற்கு ஈழ தமிழர்கள் தானே போராட வேண்டும்? நீங்கள் ஏன் போராடினீர்கள்?. .உங்கள் போராட்டத்திற்கு ஒரு நியாயம் உள்ளதென்றால் ,அவர்கள் எந்த கட்சியை சார்ந்தவரென்றால ் என்ன? தமிழீழத்தை ஏற்று ,தான் தமிழன் என்ற உணர்வுடன் போராட்டத்தை வழிநடத்தினால் என்ன குற்றம் வந்துவிட்டது.(அ வர்களின் டெல்லி தலைமை ஏற்றால் தான் இவர்களை ஏற்ப்போம் என்பது எத்தகைய மடமைத்தனம்.டி.இ ராஜா மட்டும்தானே நம்மின உரிமைக்காக டெல்லியில் குரல்கொடுக்கிறா ர்.அவர் அக்கட்சியின் தேசிய செயலாளர் என்பது உங்களுக்கு தெரியுமா?..28 மாநிலங்களில் உள்ள அக்கட்சியினர் தமிழீழத்தை ஏற்றால் தான் நாங்கள் ஏற்ப்போம் என்று நீங்கள் கூறினால்.....உங ்கள் கல்லூரியில் உள்ள 7000 க்கும் மேற்ப்பட்ட லயோலா மாணவர்களும் தமிழீழத்தை ஏற்றால் தான் உங்களின் உண்ணாநிலையை நாங்கள் ஏற்ப்போம் என தமிழுணர்வாளர்கள ் கூறியிருந்தால் உங்களின் உண்ணாவிரதம் அன்று மாலையே முடிந்து போயிருக்குமே !...ஏன் கல்லூரி படிப்புக்கு வந்தும் பக்குவமற்று செயல்படுகின்ரீர்)
அவர் காங்கிரஸ் ,சி.பி.எம்,பாரத ிய ஜனதா கட்சி,தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சியை சார்ந்தவறில்லைய ே அப்ப எதுக்கு இந்த வீண் பரப்புரை.
அய்யா நெடுமாறன் .அய்யா நல்லகண்ணு ஆகியோர் உங்களின் ஆலோசனையாளர்கள் என்று கூறியிருந்தீர்க ள்.அப்புறம் ஏன் "இராஜீவ் கொலையில் விடைதெரியாத வினாக்கள் ?" என்ற பரப்புரையை மேற்கொண்டீர்கள் . அவர்கள் ஆலோசனை பேரில் தான் செய்தீர்களா?
2 இலட்சத்துக்கும் மேற்பட்ட நம் சொந்தங்கள் படுகொலை செய்யப்பட்டதை மக்களிடம் கொண்டுசெல்வது முதன்மையா?
20 ஆண்டுகள் கழித்தும் நம்மின பகைவனை பற்றி மீண்டும் பேசி இனப்படுகொலையை மறைக்கும் உங்களின் செயல் முக்கியமா?
இதை செய்ய சொல்லி நெடுமாறன் அய்யா ஆலோசனை கூறினாரா?
நீங்கள் செய்ததெல்லாம் ஆரம்பம் முதலே தவறுமேல் தவறாக உள்ளது, அதை மறைக்க செயல்படுகிறவர்க ளை ஏன் கலங்க படுத்துகின்றீர்கள்.
உங்களிடம் (உண்ணாவிரதத்தை தவிர) மாணவர்களின் போராட்டத்தை கொடுத்திருந்தால ் அது விழலுக்கு இரைத்த நீராகத்தான் போயிருக்குமே தவிர ...இப்போராட்டம் வெற்றி பெற்றிருக்காது என்பதே உங்கள் செயல்கள் தெளிவுபடுத்துகிறது.
///////[21-05-1991 அன்று சிறிபெரும்புதூர ் குண்டுவெடிப்பில ் உயிரிழந்த பொதுமக்களின் குடும்பத்திற்கு ம், வீரம் செறிந்த காவல் துறை அதிகாரிகளின் குடும்பங்களுக்க ும் மற்றும் ராஜீவ் காந்தி குடும்பத்திற்கு ம் எங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.]
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக
ஜோ பிரிட்டோ///////
இராஜீவ் கொலை வழக்கில் விடைதெரியாத கேள்விகளில்-மேற ்கண்டவாறு வருத்தம் தெரிவிக்கும் நீங்கள் ...உங்களின் பின்னால் உளவுத்துறை உள்ளது என்று கூறினால் ..சீறுவதில் என்ன நியாயம் உள்ளது லயோலா மாணவர்களே!...
உண்மை ஒருநாளும் ஒளிந்திருக்க போவதில்லை...அப் போது தெரியும் அவரவர்களின் உண்மை முகம்!
- கு.செந்தில் பாண்டியன், நெல்லை
RSS feed for comments to this post