தலித் இளைஞர் படுகொலை - சாதிய துவேசத்தை பரப்பி வரும் வன்னியர் சங்கத்தை தடை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சேத்தியாதோப்பு அருகில் உள்ள கிராமம் சென்னிநத்தம். இக்கிராமத்தில் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட தலித் இளைஞர் திரு.கோபாலகிருஷ்ணன் (20) த/பெ.மாயகிருஷ்ணன் என்பவரின் கொலை செய்யப்பட்ட சடலம் 19.12.2012 அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தலித் இளைஞர் கோபாலகிருஷ்ணன் சாதி இந்து பெண் திருமிகு.துர்கா (20) என்பவரைக் காதலித்து வந்ததனால் துர்காவின் குடும்பத்தினரும் அப்பகுதி சாதி இந்து வன்கொடுமை கும்பலும் கோபாலகிருஷ்ணனை கொலை செய்துள்ளனர் என்று கோபாலகிருஷ்ணனின் தந்தை மாயகிருஷ்ணனும் அப்பகுதி தலித்துகளும் புகார் தெரிவித்துள்ளனர். சாதிய துவேசத்தாலும் போலி கௌரவத்தாலும் நடத்தப்பட்ட இக்கொடிய படுகொலை குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாகச் சென்று களஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இச் செய்தி வெளியிடப்படுகிறது.
சென்னிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் கோபாலகிருஷ்ணன் திருமுட்டம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் பரவூர் கிராமத்தில் வசித்து வரும் சாதி இந்து ரவி என்பவரின் மகள் துர்காவும் காதலித்து வந்துள்ளனர். துர்கா பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 12.12.2012 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் சேத்தியாதோப்பு பகுதியில் நடந்த புதன்கிழமை சந்தைக்கு தலித் இளைஞர் கோபாலகிருஷ்ணன் தம்முடைய நண்பர்கள் பீட்டர் (27) த/பெ.கோவிந்தராஜ், பாக்கியராஜ் (30) த/பெ.புதுராஜா ஆகியோருடன் வந்துள்ளார். அங்கு துர்காவும் வந்திருக்கிறார். சந்தைக்கு வந்த துர்கா, செல்போன் மூலமாக கோபாலகிருஷ்ணனிடம் பேசியுள்ளார். ‘இரவு ஆகிவிட்டது, வீட்டிற்கு செல்ல வேண்டும் என்னுடன் துணைக்கு நீ வா’ என்று துர்கா அழைக்கவே அவருடன் கோபாலகிருஷ்ணன் பரவூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். பரவூர் கிராமத்தில் துர்காவை வீட்டில் விட்டுவிட்டு வருகின்றபோது துர்காவின் பாட்டி கனகவள்ளி, கோபாலகிருஷ்ணனை சாதி ரீதியாக கடுமையாக இழிவாகப் பேசியுள்ளார். இதன் பிறகு கோபாலகிருஷ்ணன் வீடு திரும்பவில்லை.
மறுநாளும் 13.12.2012 அன்று தம்முடைய வீட்டிற்கு கோபாலகிருஷ்ணன் திரும்பவில்லை. சந்தேகமடைந்த கோபாலகிருஷ்ணனின் தந்தை மாயகிருஷ்ணன் மற்றும் அப்பகுதி தலித்துகள் 14.12.2012 அன்று சேத்தியாதோப்பு டி.எஸ்.பி. ஆறுமுகச்சாமி அவர்களை சந்தித்து கோபாலகிருஷ்ணனை காணவில்லை என்கிற புகாரினை கொடுத்துள்ளனர். அப்போது டி.எஸ்.பி. ஆறுமுகச்சாமி புகார் கொடுத்தவர்களிடம் ‘உங்கள் மகன் கோபாலகிருஷ்ணன் தேவையில்லாமல் பரவூர் கிராமத்திற்கு சென்றுள்ளான். அங்குள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறான். இதனால் அக்குடும்பத்தினர் கோபாலகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்’ என்கிற தகவலை கூறியுள்ளார். இதுமட்டுமல்லாமல் ‘உங்கள் மகனை தேடி கண்டுபிடிக்கிறேன். நீங்கள் திருமுட்டம் காவல்நிலையம் சென்று புகார் கொடுங்கள்’ என்று டி.எஸ்.பி. அறிவுறுத்தியுள்ளார்.
இதனடிப்படையில் 14.12.2012 அன்று திருமுட்டம் காவல்நிலையத்தில் குற்றஎண்.328/2012 கீழ் ஆள் காணவில்லை என்கிற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அப்பகுதியில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட தலித்துகள் 16.12.2012 அன்று சேத்தியாதோப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன கோபாலகிருஷ்ணனை மீட்டுக் கொடுக்குமாறு அம்மக்கள் கோரிக்கை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து 17.12.2012 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபாலகிருஷ்ணனை கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 19.12.2012 அன்று மதியம் 1.30 மணியளவில் பரவூர் பகுதியில் கழுத்தறுக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் கோபாலகிருஷ்ணனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தற்போது இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குற்ற எண்.328/2012 பிரிவுகள் 342, 364, 302 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளது.
படுகொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணனின் தந்தை மாயகிருஷ்ணன் ஒரத்தூர் காவல்நிலையத்தில் 19.12.2012 அன்று புகார் கொடுத்துள்ளார். வன்னியர் சங்கத்தின் தலைவர் காடுவெட்டி குரு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ச.ராமதாஸ் ஆகிய இருவரின் தூண்டுதலின் பேரில் ரவி த/பெ.பரஞ்சோதி, ராணி க/பெ.ரவி, பிரபு த/பெ.கொளஞ்சான், ராமமூர்த்தி த/பெ.பரஞ்சோதி, பாலமுருகன் த/பெ.அருணகிரி உள்ளிட்ட 12 நபர்களின் பெயர்களோடு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேத்தியாதோப்பு, விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான அளவு கௌரவக் கொலைகள் நடந்துள்ளன. இதற்கு அடிப்படை காரணம் சில சாதி சங்கங்களும் சாதி சங்கத்தை மையமாகக் கொண்ட ஒரு சில அரசியல் கட்சிகளும் மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வன்முறை ஏவிவிட்டு வருவதுதான். இதனால் இப்பகுதி சாதி இந்துக்களிடையே சாதிய துவேசம் வன்கொடுமையாக வளர்ந்து அவை உயிர்களை பலி கொடுக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது கௌரவத்தின் அடிப்படையிலேயே நடத்தப்பட்ட கொடூர படுகொலையாகும். ஆகவே இப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீதும் அதற்கு பின்னணியாக இருந்த அரசியல் சக்திகள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனடிப்படையில் எமது எவிடன்ஸ் அமைப்பு அரசிற்கு சில பரிந்துரைகளை முன்வைக்கிறது.
பரிந்துரைகள்
படுகொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணனின் தந்தை மாயகிருஷ்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
இறந்து போன கோபாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும் அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.
இவ்வழக்கினை எஸ்.பி. அந்தஸ்த்தில் உள்ள விசாரணை அதிகாரி விசாரிக்க மாநில காவல்துறை இயக்குனர் சிறப்பு உத்தரவினை வெளியிட வேண்டும்.
சாதிய துவேசத்தை பரப்பி வருவது மட்டுமல்லாமல் அப்பகுதியில் பொது அமைதியை கெடுத்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சகம் தடைவிதிப்பது மட்டுமல்லாமல் அச்சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆ.கதிர், செயல் இயக்குனர், எவிடென்ஸ் அமைப்பு
Sanchai Gandhi
சாதிக்கலவர கொலைகளும் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறியும்!
தமிழ்நாட்டின் வடக்கு மேற்கு மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த எவராவது தாக்கப்பட்டாலோ, கொலை செய்யப்பட்டாலோ - அதனை யார் எதற்காக செய்திருந்தாலும ் - அந்த குற்றத்திற்காக பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா, வன்னியர் சங்கத்தலைவர் ஜெ. குரு ஆகியோரை தண்டிக்க வேண்டும் என்று கூக்குரலிடுவது ஒரு மரபாகிவிட்டது.
வன்னியர் சமூகத்தினரை ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டும் இந்த வன்னியர் எதிர்ப்பு சாதிவெறியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டுகள், காங்கிரசு, தமிழ்தேசிய அமைப்பினர் சிலர் முன்னணியில் உள்ளனர். அதற்கான எடுத்துக்காட்டா க சிதம்பரம் மற்றும் காஞ்சிபுரம் நிகழ்வுகள் உள்ளன.
சேத்தியாதோப்பு கொலை: பாவம் ஓரிடம், பழி வேறிடம்
""சிதம்பரத்தை அடுத்த சென்னிநத்தம் காலனி பகுதியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் கோபாலகிருஷ்ணன். இவர் படிக்கும் கல்லூரியில் பரதூர்சாவடி ரவி மகள் துர்கா படித்து வருகிறார். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த துர்காவின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர் . மாணவர் கோபாலகிருஷ்ணன் கடந்த டிச.12-ம் தேதி கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் மாணவர் கோபாலகிருஷ்ணன் கொலைசெய்யப்பட்ட து கண்டுபிடிக்கப்ப ட்டது. சம்பவத்தை தொடர்ந்து அருகே வெள்ளியக்குடி கிராமத்தில் மாணவி துர்காவின் பெரியதந்தை ராமமூர்த்தி வீட்டிற்கு ஒரு கும்பல் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் ராமமூர்த்தி வீடு முற்றிலும் எரிந்து சேதமுற்றது. மேலும் அருகாமையில் இருந்த இரு வீடுகளும் எரிந்து சேதமுற்றன"" என்கிற செய்தி தினமணியில் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வு குறித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தால், இது காதலுக்காக நடந்த கொலை அல்ல. கள்ளத் தொடர்புக்காக நடந்த கொலை என்கிறார்கள். பதினெட்டு வயதாகும் இளைஞர் அவரைவிட ஒரு வயது அதிகமுள்ள பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும் அதனை பலமுறைக் கண்டித்த பெண்ணின் பெற்றோர் கடைசியில் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
கொலை செய்தவரான ரவியும் அவரது குடும்பத்தினரும ் பாட்டாளி மக்கள் கட்சியிலோ, வன்னியர் சங்கத்திலோ இல்லை. அவர்கள் திரு. வேல்முருகன் அவர்களின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
எவிடன்ஸ் அமைப்பின் அறிக்கையில் "படுகொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணனின ் தந்தை மாயகிருஷ்ணன் ஒரத்தூர் காவல்நிலையத்தில ் புகார் கொடுத்துள்ளார். வன்னியர் சங்கத்தின் தலைவர் காடுவெட்டி குரு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ச.ராமதாஸ் ஆகிய இருவரின் தூண்டுதலின் பேரில் ரவி த/பெ.பரஞ்சோதி உள்ளிட்ட 12 நபர்களின் பெயர்களோடு புகார் பதிவு செய்யப்பட்டுள்ள து" என்று கூறப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான அமைப்பாகக் கருதப்படும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த நபர்கள் செய்த கொலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரையும் வன்னியர் சங்கத் தலைவரையும் இணைத்து பேசுவது என்ன விதமான சாதி வெறியோ?!
விடுதலை சிறுத்தை சொந்தக் கட்சிகாரர்களே செய்த கொலையில் வன்னியர்கள் மீது வீண் பழி!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டத் துணைச் செயலாளர் கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்டத் துணைச் செயலாளர் நாராயணன் (எ) அம்பேத்கர்வளவன் அவர்களை 9-12-2012 அன்று இரவு சாதி வெறிபிடித்த சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது.
தருமபுரி அருகே 6 மணி நேரம் நடந்த சாதிவெறியாட்டத் தைத் தடுக்கவோ, தலித் மக்களைப் பாதுகாக்கவோ துளியளவும் முனைப்புக்காட்ட ாத தமிழக அரசும் அதன் காவல்துறையும் தொடர்ந்து அமைதிகாத்து வருவது சாதிவெறியர்களை ஊக்கப்படுத்துவத ாக அமைந்துள்ளது. சாதிவெறியர்களை ஊக்கப்படுத்தும் தமிழக அரசின் இத்தகைய அமைதிப்போக்கும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டும் சாதிவெறியர்களின ் நடவடிக்கைகளும் சாதியவாத சமூகவிரோதக் கும்பலுக்கு உந்துதலாக அமைந்திருப்பதன் விளைவாகவே தம்பி அம்பேத்கர் வளவன் காஞ்சிபுரத்து வீதியில் வெளிச்சம் நிறைந்த பகுதியில் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக ்கிறார்....தரும புரி மற்றும் கடலூர் பகுதிகளில் நடந்தேறிய வன்முறை வெறியாட்டங்களைத ் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் அம்பேத்கர்வளவன் படுகொலை நிகழ்ந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து, "விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரின் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்றுக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம், கொலை நடந்த சம்பவம் அருகே வந்த போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பா.ம.க. கொடி மரத்தை சாய்த்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் கற்களை வீசினர்" என்று பத்திரிகை செய்திகள் தெரிவித்துள்ளன.
ஆக, விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் கொலை செய்யப்பட்டதற்க ு பாமக'வும் வன்னியர்களும் குற்றம் சாட்டப்பட்டனர். பாமக கொடிக் கம்பங்கள் உடைக்கப்பட்டன.
ஆனால் காவல்துறை விசாரணையில், விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணைச் செயலர் சோகன்பிரபுதான் இந்தக் கொலையை செய்தார் என்பது வெட்டவெளிச்சமாக ியுள்ளது. ""டைல்ஸ் பாபு, ஸ்ரீதர், ஆகியோர் கோனேரிகுப்பம் ஊராட்சி தலைவியின் மகனும், விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணைச் செயலருமான சோகன்பிரபுவிடம் பேசியுள்ளனர். நாராயணனை கொலை செய்தால், அவரது எதிரியான, சேகரை கொலை செய்வதாகக் கூறியுள்ளனர்.அத ற்கு சம்மதம் தெரிவித்த சோகன்பிரபு, தனது ஆட்களான செவிலிமேடு அம்பேத்கர் நகரை சேர்ந்த எழில்மாறன், விஜயசங்கர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த டேவிட், செம்பரம்பாக்கத் தை சேர்ந்த சாலமன், காஞ்சிபுரம், முனிசிபல் குடியிருப்பை சேர்ந்த மதன்குமார், உத்திரமேரூரை சேர்ந்த சிம்பு, நீதிமன்றத்தில் சரணடைந்த அறிவழகன், தாமஸ், நரேஷ்குமார், ஆகியோர் உதவியுடன் கொலை செய்துள்ளார். இக்கொலை வழக்கில், சோகன்பிரபு மற்றும் அவரது ஆட்கள் நேரடியாக சம்பந்தப்பட்டுள ்ளனர்."" என்று கூறுகிறது பத்திரிக்கை செய்தி.
கட்டைப் பஞ்சாயத்து சண்டையில் விடுதலை சிறுத்தை சொந்தக் கட்சிகாரர்களே செய்த கொலைக்கு பாமக'வும் வன்னியர்களும் எதற்காக குற்றம் சாட்டப்பட்டனர்? பாமக கொடிக்கம்பங்கள் எதற்காக வெட்டப்பட்டன? இது என்ன விதமான சாதி வெறியோ?!
RSS feed for comments to this post