தமிழ் சிவில் சமூகம் என்ற பெயரில் எழுபத்தியாறு ஈழத் தமிழ் சமூகச் செயற்பாட்டளர்கள் கடந்த டிசம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு பகிரங்க அறிக்கை ஒன்றை விடுத்திருந்தனர். ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தின் தொய்விற்குப் பின்னர் ஈழத் தமிழரது அரசியலை முன் நகர்த்துவதற்கு தனியே பாராளுமன்ற பிரதிநிதித்துவ அரசியல் போதாதென்ற உணர்வில், தமிழ்த் தேசிய பரப்புக்குள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட சிவில் சமூக வெளி ஒன்று உருவாக வேண்டும் என்ற நோக்கில், இது நாளடைவில் மக்கள் மயப்படுத்தப்பட்டு ஈழத் தமிழ் அரசியலின் பிரதான சக்தியாக பரிமாணிக்க வேண்டும் எனும் நோக்கில் 'தமிழ் சிவில் சமூகம்' என்ற அடையாளப்படுத்தலிற்கூடாக  இம் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் 29.07.2012 அன்று தொண்ணுற்றி எட்டு தமிழ் சமூகச் செயற்பாட்டளர்கள் கையெழுத்திட்டு கிழக்கு மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இவ்விரு அறிக்கைகளும் ஈழத் தமிழரது சம கால அரசியலையும் அவர்களது அரசியல் அபிலாஷைகளையும் விளங்கிக் கொள்வதற்கு முக்கியமான ஆவணங்கள் எனக் கருதி இங்கு மறு பிரசுரம் செய்யப்படுகிறது.

***

13 டிசம்பர் 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம்

தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகம் என்ற அடிப்படையில் நாம் பின்வரும் விடயங்களை எமது பாராளுமன்றப் பிரதிநிதிகளான உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்:

1.         அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு தொடர்பிலானது: 

அ) பல சுற்றுத் பேச்சுவார்த்தைகளின் பின்னர் பேச்சுவார்த்தைகளின் போது பேச்சளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பது போல் தென்பட்ட போதிலும் அரசாங்கத்திடமிருந்து மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் எமுத்து வடிவில் விளக்கம் கிடைக்கப் பெறும் வரை அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதியை நிர்ணயிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தை கடந்த 04 ஆகஸ்ட் 2011 அன்று நீங்கள் எடுத்திருந்தீர்கள். உங்களது அறிக்கையில் அது வரையிலான பேச்சுவார்த்தைகளை ‘ஏமாற்றும்’ தன்மையானவை என வர்ணித்திருந்தீர்கள். இந்நிலைப்பாட்டை த. தே. கூ. எடுத்திருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்றது என்பது சிவில் சமூகத்தினர் என்ற வகையில் நாம் அறிந்துள்ளோம்.

இது இவ்வாறிருக்க 14 செப்டம்பர் 2011 அன்று திடீரென பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பு தங்களிடமிருந்து வந்த போது நாம் பெருவியப்படைந்தோம். பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ளும் உங்களது இந்தத் தீர்மானமானது தங்களது ஆகஸ்ட் 4 திகதியிட்ட அறிக்கையை முற்றிலும் அர்த்தமற்றதாக்கிய செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். குறிப்பாக ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் - அரசாங்கத்துக்கெதிரான சர்வதேச அழுத்தம் அதிகரித்து வந்து கொண்டிருந்த காலப்பகுதியில் - பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்த தங்கள் முடிவானது அரசாங்கத்தைக் காப்பாற்றும் விதத்தில் அமைந்து விட்டதாக நியாயமான விமர்சனம் ஒன்று முன்வைக்கப்படுகின்றது. இதற்கான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியது தங்களது தார்மீகக் கடமையாகும்.

அண்மையில் டிசம்பர் 1 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு த.தே.கூ பெயர்களைப் பிரேரிக்கத் தவறியமையால் பேச்சில் விரிசல் நிலை அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பேச்சுவார்;தைகள் டிசம்பர் 6 அன்று இடம்பெற்றன. வடக்குக் கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக நிற்பதாகக் கூறப்படுகின்றது. இவை மூன்றும் மறுக்கப்படின் தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை. பேச்சுக்களில் உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பது தொடர்பிலான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியது தங்களது கடமையாகும்.

ஆ) புதுடில்லியில் கடந்த ஆகஸ்ட் 23 மற்றும் 24 திகதிகளில் இந்திய காங்கிரஸ் உறுப்பினர் திரு. சுதர்சன நாச்சியப்பன் அவர்களால் கூட்டப்பட்ட பல்-தமிழ் கட்சி மகாநாட்டில் ‘தேசியம்’,‘சுயநிர்ணயம்’ என்ற வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கிய தீர்மானமொன்றில் த.தே.கூ சார்பில் பங்குபற்றிய அதன் ஆரம்பகால அங்கத்துவ கட்சிகளின் உறுப்பினர்கள் கையெழுத்திட மறுத்தமை எமக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கருத்தொருமிப்பு ஏற்படாததால் கையெழுத்திடவில்லை என்ற விளக்கம் எந்த வகையிலும் ஏற்புடைத்தன்று. இந்த வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடக்கப்படுவதை எதிர்த்த தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் போன்ற அமைப்புக்கள் த.தே.கூ வில் அண்மைக்காலத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள். (இந்த வார்த்தைப் பிரயோகங்களை எதிர்த்த மற்றைய இரு உதிரிக் கட்சிகள் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.(பத்மநாபா அணியும்) ஈ.என்.டி.எல்.எஃப்பும்.). மேற்சொன்ன தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் ஆகிய கட்சிகளை அண்மைக்காலத்தில் உள்வாங்கி, கடந்த உள்@ராட்சித் தேர்தல்களில் நீங்கள் போட்டியிட்டமை யாவரும் அறிந்தது. த.தே.கூ வின் கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் செயற்படுமிடத்து அவர்கள் த.தே.கூ. வின் அடிப்படை அரசியற்கோட்பாடுகளுக்கு உட்பட வேண்டிய கடப்பாட்டை அவர்களுக்கு நீங்கள் இடித்துரைத்திருக்க வேண்டும் அல்லது அவர்களது நிலைப்பாட்டுக்கான விளக்கத்தை கேட்டிருக்க வேண்டும். த.தே.கூ அவ்வாறான வலியுறுத்தலை மேற்கொள்ளாமல் போனதை அல்லது அவர்களின் விளக்கத்தை கோராதுவிட்டதை அவர்களது கொள்கை நிலைப்பாட்டை நீங்களும் - த.தே.கூ. - ஒப்புக் கொள்வதான சமிக்ஞையாகவே கருத வேண்டியுள்ளது. இலக்கற்ற ஒற்றுமை என்பதில் அர்த்தமில்லை. தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்குத் துணை செய்வதாக, வலிமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். அதனை அழிப்பதற்கான ஒற்றுமையில் பயனேதுமில்லை.

இ) த.தே.கூ. வினது அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாடு தொடர்பாக, அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்கின்றவர்களும் கட்சியின் பிரதான சர்வதேச தொடர்பாளர்களுமாகிய திரு. சம்பந்தன் அவர்களும், திரு. சுமந்திரன் அவர்களும் செய்து வருகின்ற பொது வெளிப்படுத்தல்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து முரண்படுவதை நாம் அவதானித்து வருகின்றோம்;. தீர்வு ‘தேசியம்’, ‘சுயநிர்ணயம்’ என்ற அடிப்படைகளிலன்றி தமிழர்கள் சிறுபான்மையினர், சம உரிமைகள் தேவை என்ற அடிப்படையிலேயே முன்வைக்கப்படுவதாக மீளவும் மீளவும் தெரிவிக்கப்படுகின்றது. (உதாரணமாக: திரு சுமந்திரன் அவர்களால் 26 ஏப்பிரல் அன்று வழங்கப்பட்ட அமரர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் நினைவுப் பேருரை, திரு சம்பந்தன் அவர்களது 04 ஒக்டோபர் 2011 திகதியிட்ட கல்முனை மாநகரசபைத் தேர்தலை ஒட்டிய அறிக்கை போன்றவை)

சிறுபான்மையினங்கள் கோரி நிற்பது மொழி மற்றும் கலாசார உரிமைகளையே. தம்மை ஒரு தேசமாகக் கருதுகின்ற மக்களைக்கொண்ட ஒரு தேசிய இனத்துக்கே தன்னாட்சி உரிமைகளை தமக்கிருக்கும் சுயநிர்ணயத்திற்கான உரிமையின் அடிப்படையில் கேட்கும் உரிமை உள்ளது. தமிழர்களாகிய நாம் எம்மை ஒரு தேசமாகக்கருதியே எமக்குரித்தான சுயநிர்ணயத்திற்கான உரிமையின் அடிப்படையில் சுயாட்சியை கோருகின்றோம்.

அதே போன்று சமவுரிமைகளைக் கேட்பதானது சுயாட்சியைக் கேட்பதாகாது. சட்டத்தின் ஆட்சியும் (சுரடந ழக டுயற) நல்லாட்சியும் (புழழன புழஎநசயெnஉந) பூர்த்தி செய்யப்படும் ஒரு நாட்டில் சகலரதும் ‘சமவுரிமைகள்’ பாதுகாக்கப்படும். தமிழர்களது பிரச்சனைகள் வெறுமனே சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதினூடாக தீர்க்கப்பட முடியாதவை. சுயாட்சியைப் பெற்றுக் கொள்வதினூடாகவே எமது அரசியற்பிரச்சனைகள் தீர்க்கப்படலாம்.

தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட பட்டறிவின் பயனாகவே எமது முன்னைய தலைவர்களும் மக்களும் ஈற்றில் 1976இலும் 1977இலும் தமிழ்த்தேசம், சுயநிர்ணய உரிமை, சுயாட்சி என்ற அரசியல் கோட்பாடுகளை தமது அரசியல் அபிலாஷைகளாகக்கொள்ளும் நிலைப்பாட்டை வந்தடைந்தனர். பின்னர் வந்த எமது 30 வருட வாழ்வும், அரசியல் வரலாறும் இந்த அடிப்படையிலேயே இயங்கியது. இப்போது ஒருசிலருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதற்காக இந்த அடிப்படைகளை விட்டுவிட்டோ, அல்லது மறைத்தோ எமது அரசியல் பயணத்தை நாம் தொடரமுடியாது.

தேசியம், சுயநிர்ணயம் என்று கூறுவதன் மூலம் தனிநாட்டைக் கோருவதாகப் பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய நிறுவன ரீதியான ஏற்பாடுகள் தொடர்பாக நாம் பேச்சுவார்த்தை மேசையில் பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால் தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையிலான ஒரு தீர்வுக்கு நாம் செல்லத்தவறுவோமாயின் நாம் உண்மையான சுயாட்சியைப் பெற்றுக் கொள்ள முடியாததாகிவிடும். இந்த அடிப்படைகளை ஏற்றுக்கொள்ளாத, உள்ளடக்காத எந்த ஒரு அரசியல் தீர்விலும் பிரயோசனம் இல்லை. மாறாக இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்கின்ற தீர்வு மட்டுமே நீடித்து நிலைக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வைத் தருவதோடு, இத்தீவின் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும், வெளியார் தலையீட்டுக்கான தேவையையும் இல்லாமல் செய்யும்.

தமிழர் ஒரு தேசிய இனம், தமிழர் ஒரு தேசம், எமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற அரசியல் நிலைப்பாட்டை நாம் எடுத்தமையில் எந்தத் தவறும் இல்லை என்ற மனவுறுதி உங்களிடத்தில் எப்போதும் வெளிப்பட வேண்டும். இத்தகைய மனவுறுதி உள்ளவர்கள் தான் தமிழர் சார்பில் பேச வேண்டும். பேச முடியும். தனியே இவற்றை கோஷ‌ங்களாக முன்வைப்பதனூடாக நாம் இந்த இலக்கை அடைந்து கொள்ள முடியாது என்பது உண்மையே. அரசியல் உபாயங்கள் மிகவும் அவசியம். ஆனால் அரசியல் உபாயங்களுக்காக எமது இந்த அரசியல் அடிப்படைகளை, அபிலாஷைகளை விட்டுக் கொடுத்துவிட முடியாது. இவை பேரம் பேசும் பொருட்களல்ல. விட்டுக் கொடுப்போமெனின் எதற்காக நாம் அரசியல் செய்கின்றோம் என்ற கேள்விக்கு மக்களுக்கு விடை கூற வேண்டியிருக்கும்;.

2.         எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக

எதிர்வரும் 2012 இல் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவிருப்பதாக அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டு வருகின்றது. இத்தேர்தலை த.தே.கூ சந்திக்குமானால் அதில் அமோக வெற்றி பெறும் என்பதில் எமக்கு சந்தேகமில்லை. ஆனால் இதனையே அரசாங்கமும் விரும்புகின்றது என்பதில் உள்ள சூட்சுமத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கையின் அரசியல் யாப்பின் ஓரங்கமான 13ஆம் திருத்தத்தின் நடைமுறை வடிவத்திற்கப்பால் எவற்றையுமே தீர்வு தொடர்பில் கருத்தில் கொள்ள விரும்பாத அரசாங்கம், 13ஆம் திருத்தத்தை ஏற்க மாட்டோம் என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் மக்களிடமிருந்து ஆணை பெற்ற த.தே.கூ வை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வைத்து அத்தேர்தலில் அது வெற்றி; பெறுவதையும் விரும்புகின்றதென்றால் அதற்கான உள்நோக்கம் பூடகமானதல்ல. மாகாண சபை முறைமையினை தழிழர்கள் ஓரு தீர்வாக ஏற்றுக் கொண்டுவிட்டதாகப் பிரச்சாரம் செய்வதற்காகவே அரசாங்கம் இதனை முயற்சிக்கின்றது. 

அமெரிக்க, இந்திய அரசாங்கங்களும் 13ஆவது திருத்தத்தை தீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துவதிலிருந்து இவ்வரையறைக்கப்பால் செல்லுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதைச் சுட்டுவதாக கருதமுடியும். ஆகவே மாகாண ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இன்னும் மேலதிகமாக கேட்டு வாங்கலாம் என்ற உபாயம் ஆபத்தானது. 13ஆவது திருத்தம் என்ற வரையறைக்குள்ளிருந்து ஓர் எல்லைக்கப்பால் பிரயாணிக்க முடியாது என்பதை சட்ட அறிஞர்கள் பலரை உங்கள் மத்தியில் வைத்திருக்கின்ற உங்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. கட்டம் கட்டமாக அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையும் மேற்சொன்ன காரணங்களுக்காக சாத்தியப்படாது. 13ஆவது திருத்தத்தை அல்லது அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் சில திருத்தங்களை அடிப்படையாகக் கொண்ட ஓரு தீர்வுப் பொதியை இடைக் காலத் தீர்வாகக் கருதவும் முடியாது. மக்களுடைய அன்றாடப் பிரச்சனைகளுக்குக் கூடத் தீர்வுகளைத் தர முடியாத இவ்வகை இடைக்காலத் தீர்வுகளால் எந்தப் பயனும் இல்லை. இவை எல்லாவற்றிற்கும் மேலதிகமாக பிரிந்த வடக்குக் கிழக்கில் த.தே.கூ போட்டியிடுவதனால் ஏற்படக்கூடிய அரசியல் அபத்தத்தையும் மனதில் கொள்ள வேண்டியுள்ளது. வடக்குக் கிழக்கு இணைப்பு என்பது ஒரு போதும் விட்டுக் கொடுக்கப்பட முடியாதது, பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாதது. இதை த.தே.கூ. இந்திய, அமெரிக்க அரசுகளுக்கு வலியுறுத்த வேண்டுமே அன்றி, இந்த அழுத்தங்களுக்கு பயந்து தமிழ்த்தேசத்தின் ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலத்தை மீள முடியா பாழுக்குள் தள்ளக்கூடாது. 

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் எமது அரசியல் தீர்வு தொடர்பில் நாம் முன்நோக்கி நகர்வதற்கு ஓரு பெரும் தடைக்கல்லாக அமையும். மேலும் குறிப்பாகச் சொல்லுவதாயின் மாகாண சபையை த.தே.கூ கைப்பற்றும் தருவாய் என்பது எமது நீண்ட அரசியல் பயணத்தின் அவல முடிவாக அமைந்து விடும். அத்தகைய நிகழ்வு ஈற்றில் முற்றுமுழுதான அரசியல் முள்ளிவாய்க்காலாகவும் அமைந்துவிடும். இது நடைபெறாமல் தடுக்கும் வரலாற்றுக்கடமை த.தே.கூ. விடமே இன்று உள்ளது.

பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்தத் தறுவாயில் மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு பொருத்தமற்றது எனவும் தேவையற்றதெனவும் த.தே.கூ நிலைப்பாடெடுக்கவும் அதை பேச்சுவார்த்தை மேசையிலும் சர்வதேசத்திடமும் வலியுறுத்தவும் தேவையான நியாயப்பாடு த.தே.கூ. இடம் உள்ளது. அதேபோல் இன்னுமொரு தேர்தலில் தமிழ் மக்களின் ஆணையைப்பெற்றுத்தான் த.தே.கூ. தமிழ் மக்களின் அபிலாஷைகளை அரசுக்கும் உலகுக்கும் அறிவிக்க வேண்டுமென்றுமில்லை.

அரசாங்கம் இதனை மீறி தேர்தல்களை நடாத்துமாயின் தேர்தலில் த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. மாறாக, தமிழ்த் தேசிய விரோத சக்திகள் அல்லது அரச சார்பு சக்திகள் மாகாண சபையைக் கைப்பற்றுவதைத் தடுக்க நாம் வேறு மாற்று உபாயங்கள் தொடர்பில் சிந்திக்கலாம். இவை தொடர்பில் த. தே. கூ. மக்களோடு கலந்தாலோசிக்க வேண்டும்.

தேர்தல் அரசியலுக்கப்பால் ஓர் அரசியல் விடுதலை இயக்கமாக செயற்பட வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகவே தமிழ் மக்கள் த.தே.கூ வைக் கருதுகின்றார்கள். இந்தக் குறிக்கோளின் அடிப்படையில் த. தே. கூ தொடர்ந்து செயற்படும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் தொடர்ந்து வந்த சகல தேர்தல்களிலும் த. தே. கூ. க்கு தமது ஆணையை வழங்கி வருகிறார்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தருணத்தில் இந்த விண்ணப்பத்தை, எமது தேசத்தின் ஆன்ம வெளிப்பாடாக உங்களிடத்து முன்வைக்கின்றோம். இலட்சக் கணக்கில் மரணித்த எம்மக்களினது எதிர்பார்ப்பும் இதுவே. தொடர்ச்சியான ஒடுக்குமுறைக்குட்பட்டிருக்கும் எமது மக்களின் அவாவும் இதுவே. ஒரு கௌரவமான, நீடித்து நிலக்கக்கூடிய, அரசியல் தீர்வொன்றை அடைய சரியான முடிவை மக்களின் அபிலாசைகளுக்கமைவாக எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நிறைவு செய்கின்றோம்.

நன்றி.

***

29.07.2012

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தமிழ் சிவில் சமூகம் விடுக்கும் வேண்டுகோள். 

தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். எமது தாயகத்தில் கடந்த காலத்தில் இரண்டு முறை (1989, 2008) நடந்த மாகாண சபைத் தேர்தல்களை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் புறக்கணித்திருந்தன. அரச சார்புத் தமிழ்க் கட்சியொன்றினால் சுயாதீனமாக நடத்த முடியாத மாகாண சபையை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சியொன்று சுயாதீனமாக நடாத்த முடியாது என்பதில் சந்தேகமிருக்க முடியாது. ஆளுநரதும் மத்திய அரசாங்கத்தினதும் பிடியில் உள்ள மாகாண சபை முறைமையைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்பதை 1989 மற்றும் 2008இல் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தம் வசம் வைத்திருந்த அப்போதைய முதலமைச்சர்கள் தெளிவாக அவ்வப்போது சொல்லியுள்ளனர். 

தேர்தல்களில் பங்குபற்றுவது என்பது ஓர் அரசியல் இலக்கை எய்துவதற்கான கருவியாக இருக்குமிடத்து அவற்றில் பங்குபற்றுவது சரியாக இருக்கும். மாறாக அவ்வாறாகப் பங்கெடுப்பதானது எடுத்துக் கொண்ட அரசியல் இலக்குகளுக்கு பாதகமாக இருக்குமிடத்து மாற்றுபாயங்களைப் பற்றிச் சிந்திப்பதும் எம்மீது திணிக்கப்படும் ஓர் தேர்தலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பில் முன்யோசனையுடனும் தூர நோக்குடனும் செயற்படுவதும் இற்றைக்காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலின் முன்னகர்வுக்கு அத்தியாவசியமானது. 

தமக்கெதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களிற்கெதிராகத் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்கு மக்கள் தேர்தல்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அங்கலாய்க்கின்றமை விளங்கிக் கொள்ளக் கூடியதே. அத்தகைய எதிர்ப்பை – கோபத்தை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தல் என்பது ஒரு பக்கமிருக்க தேர்தலில் பங்குபற்றுவதனால் ஏற்படக் கூடிய அரசியல் பாதகங்களையும் கவனிக்காமல் விட முடியாது. இவ்விரண்டையும் சமாளித்துப் போகக் கூடிய வகையில் - தேர்தலில் பங்குபற்றுவதற்கான மாற்றுபாயங்களைப் பற்றி நிதானமாகச் சிந்தித்து, ஓர் விடயத்தின் பல் பரிமாணங்களை விளங்கிக் கொண்டு முடிவெடுப்பது தமிழ்த் தேசிய அரசியலில் ஆத்மார்த்தமான அக்கறையுள்ள அனைவரினதும் தலையாய கடப்பாடாகும். வெறுமனே அரச சார்புத் தமிழ்க் கட்சியொன்றை கிழக்கு மாகாண வெளிக்குள் விடக் கூடாது என்ற உடனடி அரசியல் தந்திரோபயத்திற்காக தமிழ் மக்களின் விட்டுக் கொடுக்கப்படவோ விலை பேசவோ முடியாத அடிப்படையான அரசியல் நிலைப்பாடுகளில் தொய்வு ஏற்படுவதை தமிழ் மக்கள் அனுமதிக்க ஒரு போதும் முன்வரமாட்டார்கள். எது எவ்வாறாக இருப்பினும் தேர்தல்களில் நேரடியாகப் பங்குபற்றுவது என்ற முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது என்ற கடினமான யதார்த்தத்தை கருத்தில் கொண்டு த.தே.கூ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதன்மைப்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் சில பரிந்துரைகளைச் செய்ய விழைகின்றோம். 

1.            தற்போதைய ஒற்றையாட்சி அரசியலமைப்பும் அதன் கீழான மாகாண சபை முறைமையும்; நிராகரிக்கப்பட வேண்டும.; 13ஆவது திருத்தமானது அரசியல் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட ஏற்கப்பட முடியாதது.

2.            வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகமாகும். எந்தவொரு அரசியல் தீர்வும் இணைந்த வடக்குக் கிழக்கை ஓர் அலகாக அங்கீகரிப்பதாக அமைய வேண்டும். இவ்விடயம் தொடர்பில் குறிப்பாக முஸ்லிம் மக்களது நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வது முக்கியமானதாகும். தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து வேலை செய்தல் இவ்விரு சமூகத்தினதும் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இன்றியமையாததாகும்.

3.            நீடித்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வொன்று தமிழர்களது தேசம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரிப்பதனூடாகவே வரும். இவற்றை அங்கீகரிக்காத எந்தவொரு அரசியல் செயன்முறையும் பிரயோசனமற்றது.

4.            ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில் தமிழருக்கெதிரான அநியாயங்களும் அடக்குமுறைகளும் பெருகியுள்ளனவே அன்றி குறையவில்லை. தமிழரது நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுதல், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாகத் தடுப்பில் வைக்கப்பட்டிருத்தல், காணாமற் போனோர் தொடர்பில் தொடர்ச்சியாக எவ்வித முன்னேற்றமும் இல்லாதிருத்தல், தமிழ்த் தேசியத்தின் பொருளாதார, கலாசார அடிப்படைகள் சீரழிக்கப்படுதல், அன்றாட வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரித்தல், கல்வி, உயர் கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி ஆகிய அனைத்துத் துறைகளினது தனித்துவங்களை; சீரழிக்கும் வகையில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரித்தல், உயர் பாதுகாப்பு வலயங்கள் நிரந்தரமாக்கப்படல் (சம்பூர் உயர் பாதுகாப்பு வலயம் உட்பட), இடம்பெயர்ந்த மக்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் தொடர்ச்சியாக முகாம் வாழ்வில் இன்றும் அல்லற்படல், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் புறக்கணிக்கப்படல் போன்றன தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அனுபவிக்கும் இன்னல்களுக்கு உதாரணங்கள். மேலும் தமிழருக்கெதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழரது பிரச்சனைகளிற்குத் தீர்வு காண முடியாது என்பதைச் சர்வதேச சமூகம் உணர வேண்டும். அவ்வறிக்கையும் அதனை அமுல்படுத்துவதற்கான திட்டமும் சர்வதேசத்தை ஏமாற்றும், நேரத்தை வாங்கும் முயற்சியே. மேலும் அவ்வாறாகக் கிடைக்கும் நேர இடைவெளிக்குள் தமிழர்களது இருப்பை முற்றாக இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றது என்பதனைச் சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். 

மேற்படி விடயங்களை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தல்களில் பங்குபற்றுவதனூடாகத் தமிழர்கள் பிரிந்த வடக்குக் கிழக்கை அங்கீகரித்து விட்டனர், மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டு விட்டனர் என்ற வாதத்தின் செறிவை ஒரளவேனும் குறைக்கலாம் என எண்ணுகின்றோம். மாகாண சபை முறைமையையும் பிரிந்த வடக்குக் கிழக்கையும் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்தல் இன்றியமையாததாகும்.

 ***

அதி வணக்கத்துக்குரிய
கலாநிதி. இராயப்பு ஜோசப்,
மன்னார் கத்தோலிக்கப் பேராயர்.

செல்வி சாந்தா அபிமன்னசிங்கம்
ஜனாதிபதி சட்டத்தரணி, யாழ்ப்பாணம்.

பேராசிரியர். க. கந்தசாமி
விஞ்ஞான பீடாதிபதி
யாழ் பல்கலைக்கழகம்.

பேராசிரியர். இ. விக்கினேஸ்வரன்,
கணித, புள்ளிவிபரவியற்றுறைப்
பேராசிரியர்,
உப தலைவர், அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.

திரு. வி. கமலதாஸ்
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு

திரு. எஸ். அரசரட்ணம்
முன்னாள் வங்கியாளர்
அம்பாறைத் தமிழர் மகா சபை

பேராசிரியர். சி.க. சிற்றம்பலம்
ஓய்வுநிலைத் தகைசால் வரலாற்றுப் பேராசிரியர்,
தலைவர், இந்து சமயப் பேரவை

பேராசிரியர். இ. குமாரவடிவேல்
சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர்,
முன்னாள் பதில் துணைவேந்தர்,
யாழ் பல்கலைக்கழகம்.

பேராசிரியர். வி.பி. சிவநாதன்,
பீடாதிபதி, கலைப்பீடம், யாழ் பல்கலைக்கழகம்.

பேராசிரியர். ஆ. ச. சூசை.
புவியியற்றுறை, யாழ் பல்கலைக்கழகம

திரு. து. இராமகிருஷ்ணன்
செயலாளர், அம்பாறை மாவட்ட தழிழர் சங்கம், கல்முனைக் கிளை

திரு. பொன். செல்வநாயகம்
ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர், பாண்டிருப்பு

திரு. க. சூரியகுமரன்
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனப் பிரதிநிதி, வடமராட்சி வடக்கு க. தொ. கூ. சங்க சமாசப் பிரதிநிதி

திரு. தி. இராஜன்
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு

திரு. த. கலையரசன்
தவிசாளர், பிரதேச சபை, நாவிதன்வெளி

திரு. அ. கணேசமூர்த்தி,
ஓய்வு நிலை சுகாதாரக் கல்வி உத்தியோகஸ்தர், நற்பிட்டிமுனை

வணபிதா. கி. ஜெயக்குமார்,
பங்குத் தந்தை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்

திரு. த. குருகுலராஜா
ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர், கிளிநொச்சி

திரு. சி. கந்தசாமி
சிரேஷ்ட சட்டத்தரணி, பருத்தித்துறை

வைத்திய கலாநிதி. (திருமதி). சி. உதயகுமார்.
பொது வைத்திய நிபுணர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. சி. சிவன்சுதன்.
பொது வைத்திய நிபுணர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

திரு. அ. பஞ்சலிங்கம்
ஓய்வு பெற்ற அதிபர்,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிஃகொக்குவில் இந்துக் கல்லூரி

திரு. சிவசுப்பிரமணியம்
நிர்வாகப் பிரதிநிதி, வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பு

வைத்திய கலாநிதி. ப. சத்தியலிங்கம்
வைத்திய அதிகாரி, வவுனியா

வைத்திய கலாநிதி. சி. குமாரவேள்
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வணபிதா. எஸ். ஜெயபாலன் குரூஸ்
பங்குத் தந்தை, வங்காலை, மன்னார்.
திரு. தி. இராசரத்தினம்,
ஓய்வு பெற்ற பிரதம லிகிதர், நற்பிட்டிமுனை

திரு. அ. இராசகுமாரன்,
விரிவுரையாளர், ஆங்கில மொழிப் போதனை நிலையம், தலைவர், யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.

திரு. நா. இன்பநாயகம்
தலைவர், கிராமிய உழைப்பாளர் சங்கம்
யாழ் இணைப்பாளர், தேசிய மீனவர் இயக்கம்

திரு. கா. சந்திரலிங்கம்
ஓய்வு பெற்ற அதிபர்
அம்பாறைத் தமிழர் மகா சபை

திரு. வே. அரசரட்ணம்
முன்னாள் கூட்டுறவு உதவி ஆணையாளர்
அம்பாறைத் தமிழர் மகா சபை

திரு. க. ரூபன்
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தன்னார்வலர்கள் அமைப்பு

திரு. பா. சரவணபவன்
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தன்னார்வலர்கள் அமைப்பு

வைத்திய கலாநிதி சு. ரவிராஜ்
சத்திரசிகிச்சை நிபுணர், சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்

வைத்திய கலாநிதி. செ. கண்ணதாசன்
சிரேஷ்ட விரிவுரையாளர், மருத்துவ பீடம், யாழ் பல்கலைக்கழகம்

திரு. வி. புவிதரன்,
சிரேஷ்ட சட்டத்தரணி, கொழும்பு.

திரு. கோ. ரஜீவன்
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு

திரு. ப. நிஷாந்தன்
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு

கலாநிதி. து. குணராஜசிங்கம்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
உடற்றொழியல் துறை,
மருத்துவ பீடம், யாழ் பல்கலைக்கழகம்

வைத்திய கலாநிதி. சு. பிரேமகிருஷ்ணா.
உணர்வழியியல் வைத்திய நிபுணர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

திரு. எஸ். ஜீவநாயகம்
தலைவர், கரைச்சி கிராமிய அபிவிருத்தி சங்கங்களின் சமாசம், கிளிநொச்சி

வைத்திய கலாநிதி. பூ. லக்ஷ்மன்
இருதய நோய் சிகிச்சை நிபுணர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

திரு. சி. சுந்தரேஸ்வரன்
சிரேஷ்ட வங்கியாளர், யாழ்ப்பாணம்.

வணபிதா. இ. இரவிச்சந்திரன்
இயக்குநர், யாழ் மறைமாவட்ட இளைஞர் ஆணைக்குழு, யாழ்ப்பாணம்

திரு. வி. சிறிதரன்,
சிரேஷ்ட விரிவுரையாளர், கணக்கியற்றுறை, யாழ் பல்கலைக்கழகம்

கலாநிதி. பா. நிமலதாசன்,
சிரேஷ்ட விரிவுரையாளர், கணக்கியற்றுறை, யாழ் பல்கலைக்கழகம

திரு. ஆ. சரவணபவன்,
விரிவுரையாளர், மனித வளத் துறை, யாழ் பல்கலைக்கழகம்

வைத்திய கலாநிதி. ச. சுதாகரன்,
உள வள மருத்துவப் பிரிவு, பொது வைத்தியசாலை, வவுனியா

திரு. எஸ். ஜனார்த்தனன்
யாழ் பொருளியலாளர்கள் சங்கம்

திரு. தி. விக்கினேஸ்வரன்
விரிவுரையாளர், அரசறிவியற்றுறை,
யாழ் பல்கலைக்கழகம்.

திரு. சு. திருச்செந்தூரன்
விரிவுரையாளர், அரசறிவியற்றுறை,
யாழ் பல்கலைக்கழகம்.

திரு. செ. ரவீந்திரன்
விரிவுரையாளர், புவியியற்றுறை,
யாழ் பல்கலைக்கழகம்.

திரு. எஸ். பீஷ்மன்
யாழ் பொருளியலாளர்கள் சங்கம்

வைத்திய கலாநிதி. இ. சிவசங்கர்
பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், யாழ்ப்பாணம்

திரு. ஊ. P. சத்தியசீலன்
சமூக செயற்பாட்டாளர்,
வவுனியா

திரு. எஸ். ஜெயச்சந்திரன்
முகாமையாளர், ஆசிரிய வாண்மை விருத்தி நிலையம், வவுனியா

திரு. ம. கபில்நாத்,
மனித உரிமைச் செயற்பாட்டாளர்,
வவுனியா.

திரு. சி. அ. ஜோதிலிங்கம்
சட்டத்தரணி, அரசியல் ஆய்வாளர்,
பாடசாலை ஆசிரியர்

திரு. பி. நி. தம்பு
சிரேஷ்ட சட்டத்தரணி, கொழும்பு.

திரு. கு. குருபரன்
விரிவுரையாளர், சட்டத்துறை
யாழ் பல்கலைக்கழகம், சட்டத்தரணி

வைத்திய கலாநிதி. கே. இளங்கோஞானியர்
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. க. சுரேஷ்குமார்
பெண்ணியல் மற்றும் மகப்பேற்று சிகிச்சை நிபுணர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. ப. நந்தகுமார்
சுகாதார வைத்திய அதிகாரி, தெல்லிப்பளை

வைத்திய கலாநிதி. சு. மோகனகுமார்
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

திரு. ஜே. தோ. சிம்சன்
ஆசிரியர், மன்னார்.

வைத்திய கலாநிதி. ஏ. கமலநாதன்
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

திரு. மயில்வாகனம் கிரே~pயன்
சட்டத்தரணி, கிளிநொச்சி.

திரு. பொ. கிருஷாந்தன்
சட்டத்தரணி, திருகோணமலை.

திரு. எஸ். இருதநாயகம்
சூசையப்பர் கடற்றொழிலாளர் சங்கம், மாதகல்

அருட்திரு ஜெரால்ட் ரொசய்ரோ
கொழும்பு

வைத்திய கலாநிதி. ச. பகீரதன்
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. ஞா. ஹைரின் ஆர்க்
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

திரு. சு. அரிகரன்,
முன்னாள் தலைவர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யாழ் பல்கலைக்கழகம்.

திரு. வே. பவாநந்தன்,
தலைவர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யாழ் பல்கலைக்கழகம்.

திரு. ப. தர்ஷானந்த்;,
செயலாளர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம்.

திரு. க. ஜெனமஜெயமேனன்
தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றியம்
யாழ் பல்கலைக்கழகம்.

திரு. ப. சபேஸ்குமார்,
தலைவர், வணிக பீட மாணவர் ஒன்றியம்
யாழ் பல்கலைக்கழகம்.

திரு. ஏ. பிரசன்னா
தலைவர், விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம்.

திரு. சஞ்சீவன்
தலைவர், விவசாய பீட மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம்.

திரு. செ. ஜனகன்
தலைவர், மருத்துவ பீட மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம்.

திரு. சேவியர் வில்பிரட் ஜெயரூபன்
நில அளவையாளா, யாழ்ப்பாணம்;

வைத்திய கலாநிதி. கு. பிரதீபன்
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்

திரு. திருவேணி சங்கமம்
ஓய்வு பெற்ற மாகாண சபை உத்தியோகஸ்தர், காரைதீவு, அம்பாறை

திரு. அ. றொ. மதியழகு
தலைவர், மாதகல் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்

திருமதி. ஜொஸ்மின் ஜெயராணி
செயலாளர், மாதகல் மேற்கு மகளிர் அபிவிருத்திச் சங்கம்

வைத்திய கலாநிதி. எஸ். சிவதாசன்
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. அ. யோ. தனேந்திரன்
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வணபிதா. எஸ். எம். பி. ஆனந்தகுமார்
செயலாளர், யாழ் மறைமாவட்ட குருக்கள்மார் ஒன்றியம்.

வைத்திய கலாநிதி. ம. வாசுதேவன்
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.

வைத்திய கலாநிதி. செ. குணதீசன்
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்

திரு. அ. சிற்றம்பலம்
தலைவர், மாதகல் விவசாய சம்மேளனம்

திரு. செ. கிறிஸ்துராசா
தலைவர், தூய லூர்துமேரி கடற்றொழிலாளர் சங்கம்

திரு. ஆர். ஜோன்பிள்ளை
நானாட்டான்

வணபிதா. அகஸ்ரின் புஸ்பராஜ்
பங்குத் தந்தை, நானாட்டான், மன்னார்

வணபிதா. எல். ஞானாதிக்கம்
பங்குத் தந்தை, வஞ்சியன்குளம்

திரு. க. சுகாஷ்
சட்டத்தரணி, யாழ்ப்பாணம்.

திரு. தி. அர்ச்சுனா
சட்டத்தரணி, யாழ்ப்பாணம்.

திரு. அ. சந்தியாப்பிள்ளை
யாழ் மறைமாவட்ட கத்தோலிக்கப் பொதுநிலையினர் கழகம்

(மேலே கையெழுத்திட்டோர் தமது தனிப்பட்ட நிலைப்பாட்டிலிருந்து கையெழுத்திட்டனரன்றி அவர்களது உத்தியோகபூர்வ நிலையிலிருந்து அன்று)

Pin It