இயற்கை எழில் ஓவியமாய்
எழிலுக்கே எழில் சேர்த்ததடா
தமிழா... உம் தேசம் (அன்று)
தொன்மையானது தமிழினம்
என பெருமையுடன் மார்தட்டிக் கொண்டு
செங்கோல் புரிந்தாய்
தமிழா... (அன்று)
உன் தேசமோ இறந்தவர்
உறங்கும் முற்றமாகவும்
உன் இனமோ அரியவகை
உயிரினமாகவும் மாய்கிறதடா (இன்று)
இன்னும்
நித்திரையா உனக்கு
சொப்பனம் கண்டது போதும்
விழிடா, எழுடா, கொடுடா
உன் தோளை
நம் தம்பியின்
புரட்சி புலி படையணிக்கு
வெல்லும் நம் புரட்சி
பெறுவோம் நம் ஈழம்
பாராளும் நம்மொழி (தமிழ்) அன்று

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.