மோடி வென்றதாக கூறப்படும் வாராணாசித் தொகுதியில் 6 இலட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள் உள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் நாடெங்கும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. வாராணாசியில் தற்போது வாக்காளர்களை சரி செய்யும் பணி நடந்து கொண்டிருக்கின்றது.

வாராணாசியில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை 8 தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சரிபாக்கும் பணி முடிந்துள்ளது. அதாவது இதுவரை சரியாக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் 3,11,573 வாக்காளர்கள் போலியென தெரியவந்துள்ளது. வாராணாசியில் இதுவரை சரியாக்கப்பட்ட ஐந்து இலட்சம் வாக்காளர்களில் முக்கால்வாசி பேர் போலி வாக்காளர்கள் என தெரியவந்துள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.

மாவட்டத் தேர்தல் ஆணையை அதிகாரிகள் போலி வாக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக கூறும் போது அதிக இடங்களில் முழுப்பட்டியலுமே போலிப்பட்டியலாக உள்ளது. பட்டியல் சரிபார்க்கும் பணியில் தொடர்ந்து போலி வாக்காளர் பட்டியல்தான் அதிகமாக உள்ளது. இனூம் பல்வேறு இடங்களில் இந்த பணி நடந்து வருகிறது. பட்டியலில் பலர் ஒரே பெயரை நான்கு முதல் ஐந்து இடங்களில் பதிவு செய்து வைத்துள்ளனர்.

இது கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் வரை நாடாளுமன்ற தேர்தலுக்கு சற்று முன்பாக நடந்துள்ளது. இதன்படி வாராணாசியின் மொத்த வாக்காளர்களில் 6 முதல் 8 இலட்சம் வாக்காளர்கள் போலியானவர்களாக இருக்கக் கூடும் என்று தெரிகிறது. சரியாக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது  என்றார் .

போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டது எப்படி?

தற்போது நாடு முழுவதும் வாக்காளர் சேர்க்கும் பணி நடந்த கொண்டு இருக்கிறது. இதில் பழைய வாக்காளர் பட்டியலும் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களும் முதலில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரி ஒன்றாக இருக்க அவை மீண்டும் சரிபார்க்கப்படும்.

அவற்றில் ஒரே பெயர் முகவரி பல்வேறு இடங்களில் உள்ள தொகுதிகளில் இருப்பதால் அவை தனித்து எடுக்கப்படுகிறது. இவையனைத்தும் போலியானவை என்று உறுதி செய்யபட்டு போலியான வாக்காளர்கள் பட்டியல் கணக்கிடப்படுகிறது. இப்படி கணக்கிடப்பட்டதில் தான் இதுவரை மூன்று இலட்சத்திற்கு மேல் போலி வாக்காளர்கள் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. தற்போது தொடர்ந்து மற்ற இடங்களிலும் வாக்காளர் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது .

தேர்தல் அதிகாரி தயாசங்கர் உபாத்தியாயா கூறியதாவது :

வாரணாசி பிண்டரா சட்டமன்ற தொகுதியில் 35982 அஜ்கரா சட்ட மன்றத் தொகுதியில் 15825, சிவபூர் சட்டமன்ற தொகுதியில் 10981, ரோஷியா சட்டமன்ற தொகுதியில் 69397, சேவபுரி சட்டமன்ற தொகுதியில் 7500 என்ற எண்ணிக்கையில் போலி வாக்காளர்கள் உள்ளனர். கெண்ட் என்ற சட்டமன்றத்தொகுதியில்தான் அதிகபட்சமாக 81697 போலி வாக்காளர்கள் உள்ளனர் என்று கூறினார். உடனடியாக இவர்களுடைய பெயர்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது என்றும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

வாராணாசியில் போலி வாக்காளர்கள் என்ற தகவல் கிடைத்தவுடன் ஆம் அத்மி கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டில்லியில் வெளியிட்ட அந்த அறிக்கையில் நாங்கள் தேர்தலின் போது மத்திய தேர்தல் ஆணையத்திடமும் மாநில தேர்தல் ஆணையத்திடமும் பா.ஜா.க வினர் அதிக எண்ணிக்கையில் போலி வாக்காளர்களை சேர்த்துக் கொண்டு இருக்கின்றனர் என ஆதாரத்துடன் புகார் அளித்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் எங்கள் புகாரை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது.

வாக்குச்சாவடியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. ஒரே நபர் நான்கு வாக்குச்சாவடிகளில் வாக்களித்துள்ளார். இவையனைத்தும் பா.ஜ.க வின் ஆதரவுடன் நடந்து வந்தது. மோடி தேர்ந்தெடுத்துள்ள ஜ்யபூர் கிராமம் அடங்கியுள்ள கெண்ட் சட்டமன்ற தொகுதியில் அதிக அளவு போலி வாக்காளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாராணாசி தொகுதியில் 3,37,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக பல மோசடிகளையும் செய்து வெற்றி பெற்ற மோடி. இன்று தனது அமைச்சரவையில் ஒரு வெளியுறவுத்துறை அமைச்சர் இருக்கின்றார் என்பதனை மறந்து நாடு நாடாக அலைந்து திரியும் அவர் இந்த விடயம் விஸ்வரூபம் எடுக்கும் போது இதை எப்படி எதிர்கொள்வார்? என்பதே நமது மில்லியன் டாலர் கேள்வி. குஜராத் படுகொலையில் மோடிக்கு தொடர்பில்லை என நானாவதி கமிஷன் கூறியது போல் இதற்கும் ஒரு கமிஷன் அமைத்து அதிலும் மோடிக்கும் போலி வாக்காளர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது கூட பதிலாகலாம்.

போலி வாக்காளர்களின் வெளியீடு! இந்திய போலி ஜனநாயகத்தின் வெளியீடு!

Pin It